த.வெ.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய, அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலர் அருண்ராஜ் தலைமையில், 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பெற்று, தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறது.
அதேபோல், இணையதளம் வழியாகவும் கோரிக்கைகள் பெறப்படுகின்றன. இந்நிலையில், வரும் 8ம் தேதி, த.வெ.க.,வின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட ஏற்பாடு நடக்கிறது.
இந்த அறிக்கையில், இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில், 10 வாக்குறுதிகள், இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், த.வெ.க.,வின் முழு தேர்தல் அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி, இணைய சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
