மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதி கனிம வளங்கள் நிறைந்தவை. அவற்றை கைப்பற்ற 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிப் படைகள் முயற்சிக்கின்றன. நீண்ட காலமாக அங்கு தொடர்ந்து போர் நீடிக்கிறது.

சமீபத்தில், அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்ற, ‘எம் – 23’ கிளர்ச்சிப் படையினர், காங்கோவின் இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றினர்.
கிளர்ச்சிக் குழுவை ஒழிக்க காங்கோ மற்றும் அண்டை நாடான உகாண்டா ஆகிய இரண்டும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், 2019ல் ‘இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்’ குழுவிற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்த ஏ.டி.எப்., எனப்படும் நேச நாட்டு ஜனநாயகப்படை தொடர்ந்து காங்கோவில் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிழக்கு காங்கோவில் வடக்கு கிவு பகுதியில் உள்ள நிட்டோயோவில் குடியிருப்புவாசிகள் சுடுகாட்டில் குழுமியிருந்தனர்.
அப்போது ஏ.டி.எப்., கிளர்ச்சியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் கத்தியால் சரமாரியாக அங்கிருந்த பொதுமக்கள் 60 பேரை வெட்டிக்கொன்றனர்.
மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- “சோனிபட்டில் லிப்ட் கேட்ட பெண் காரில் பாலியல் வன்முறைக்கு உள்ளானது: இரு குற்றவாளிகளுக்கு தீவிர தேடுதல்”
- அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும்! மதிப்பளிப்பு நிகழ்வும்!
- “கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு” தமிழீழக் கடற்படையின் தளபதி சூசை அவர்களின் பேட்டி – மீள் பதிவு
- பிரான்சில் வன்னிமயில் 2026 இறுதி நாள் விருதுப் போட்டி!
- இன விடுதலைக்காக உறவுகளுடன் சந்திப்பு – ஜெர்மனி
- அமெரிக்க தாக்குதல் எச்சரிக்கையில் பிராந்திய பதற்றம் தீவிரம்: ஈரான் பழிவாங்கும் என எச்சரிக்கை