மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதி கனிம வளங்கள் நிறைந்தவை. அவற்றை கைப்பற்ற 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிப் படைகள் முயற்சிக்கின்றன. நீண்ட காலமாக அங்கு தொடர்ந்து போர் நீடிக்கிறது.

சமீபத்தில், அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்ற, ‘எம் – 23’ கிளர்ச்சிப் படையினர், காங்கோவின் இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றினர்.
கிளர்ச்சிக் குழுவை ஒழிக்க காங்கோ மற்றும் அண்டை நாடான உகாண்டா ஆகிய இரண்டும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், 2019ல் ‘இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்’ குழுவிற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்த ஏ.டி.எப்., எனப்படும் நேச நாட்டு ஜனநாயகப்படை தொடர்ந்து காங்கோவில் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிழக்கு காங்கோவில் வடக்கு கிவு பகுதியில் உள்ள நிட்டோயோவில் குடியிருப்புவாசிகள் சுடுகாட்டில் குழுமியிருந்தனர்.
அப்போது ஏ.டி.எப்., கிளர்ச்சியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் கத்தியால் சரமாரியாக அங்கிருந்த பொதுமக்கள் 60 பேரை வெட்டிக்கொன்றனர்.
மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- மூதூர் மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- சிங்கள அரசின் சுதந்திர தினம், தமிழ் தேசத்தின் கருப்பு தினம் – சுவிஸ்
- உள்துறை கசிவுகள் அதிகரிக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இஸ்ரேல் குறிவைத்த பட்டியல் விரிவடைந்ததாக ஈரான் எச்சரிக்கை
- மாகாண சபைத் தேர்தல் தாமதம் தொடர்பாக இந்தியா தலையிட வேண்டும் என்று தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
- இந்த முறை ஒரு வலுவான கூட்டணி உருவாகியுள்ளது, நாம் திமுகவை தோற்கடிக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு இன்று முதல் அக்டோபர் 8 வரை கனமழை எச்சரிக்கை!