நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்கள் நேற்று முன்தினம் கலவரத்தில் ஈடுபட்டனர்.

கலவரத்தில், பிரதமர் வீடு சூறையாடப்பட்டது. நிலைமை கைமீறிப் போனதால் நேபாள பிரதமர் மற்றும் ஜனாதிபதி ராஜினாமா செய்தனர். இந்த கலவரத்தால் 19 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கடினமான சூழ்நிலையில், உயிர்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் மேலும் இழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும் , ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடரும் கலவரத்தால் நேபாள எல்லையில் வசிப்பவர்கள் நம் நாட்டுக்குள் ஊருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரதமரை பதவி விலக வலியுறுத்திய நேபாளம் நாட்டு ராணுவ தலைமை தளபதி அசோக் ராஜ் சிக்தல் , போராட்டக்காரர்கள் அமைதிகாக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்.
- ஜேர்மனியின் வூப்பெற்றால் நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!
- மலையகத் தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரிட்டன் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
- மயிலங்குளம் குளத்தில் நீச்சல் அடிக்கச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
- 2026‑ல் வட்டி விகிதங்கள் மேலும் குறைய வாய்ப்பு: இங்கிலாந்து வங்கி புதிய சுட்டுமொழிகள்
- த.வி.பு. மூத்த உறுப்பினர் திரு.கரிகாலன் அவர்களுடான நேர்க்காணல்
- பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு “10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை” விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரதமர் சர்மாஒலி, தனி விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறி துபாய் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.