திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் – செல்வநகர் பகுதியிலுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான வெற்றுக் காணியிலிருந்து நிலக்கீழ் மிதிவெடி ஒன்று செவ்வாய்கிழமை (09.09.2025) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

மாடு மேய்ப்பதற்காக சென்ற ஒருவர் வெளியில் தெரியும் வகையில் புதைக்கப்பட்ட நிலையில் மிதிவெடி இருப்பதைக் கண்டு சேருநுவர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன் பின்னர் பொலிஸார், கிராம உத்தியோகத்தர்,மிதிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி இருக்கும் இடத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
அத்தோடு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியைப் பெற்று இவ் மிதிவெடி விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட உள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
- “மாவீரர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்.” – அருட்தந்தை மா.சத்திவேல்
- தீவுப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சட்டவிரோத மணலுடன் பூநகரி பிரதேச சபையின் உழவு இயந்திரம் சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது; ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
- நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட ‘ஏழு இந்திய மீனவர்களின் விளக்கமறியல்’ நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அகவை வாழ்த்து – நவம்பர் 21
- அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் | புகழ் வணக்கம் | 05.11.2025
அதேவேளை குறித்த மிதிவெடி அகற்றும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் யுத்த காலத்தில் இரானுவ முகாம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.