கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் நேபாளத்தின் காத்மாண்டு நகரத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று புதன்கிழமை (10.09.2025) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8:35 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டு நகரத்திற்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-181 இரத்து செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலவி வரும் தொடர் போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேபாளத்தின் அனைத்து விமான நிலையங்களையும் நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
- ஒருபுறம், மத்திய கிழக்கு போர் நெருக்கடியால் ‘மகா வலி’; மறுபுறம், இலங்கை அரசாங்கத்தின் ‘மகா வலி’யையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.! – ரவிகரன் எம்.பி.
- இலங்கையில் எதிர்வரும் நத்தார் பண்டிகையையொட்டி நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.
- மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.
- இலங்கையில் ஏற்படும் பேரழிவுகளால் இதய நோய் அபாயம் 40 சதவீதம் அதிகரிக்கிறது.
- நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 7 உண்டியல்கள் களவாடப்பட்டள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
- புத்தளத்தில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 1979 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.