58

வெல்லவாய – எல்ல பிரதான வீதியின் 09ஆம் கட்டை தபால்நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (21-02-2026) காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாகனம் வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் இரு ஆண்களும் இரு பெண்களும் அடங்குவர்.
காயமடைந்த நால்வரும் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- இலங்கை வானிலை அறிக்கை
- இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு: இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட 7,950 பேர் கைது!
- இலங்கையில் வாந்தி எதிர்ப்பு மருந்தான ‘ஆன்டன் செட்ரான் (ondansetron)’ பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்துள்ளது.
- புத்தளத்தில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- தமிழர்களை ஏமாற்ற முயன்றால் நாடு வேறு திசையில் செல்லும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எச்சரிக்கிறார்.
- இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையின் ஸ்பின் தாக்குதலுக்கு தளர்வு
You Might Be Interested In