46

வெல்லவாய – எல்ல பிரதான வீதியின் 09ஆம் கட்டை தபால்நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (21-02-2026) காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாகனம் வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் இரு ஆண்களும் இரு பெண்களும் அடங்குவர்.
காயமடைந்த நால்வரும் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- இலங்கையில் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சமூக ஊடகங்களில் பல போலியான தகவல்கள் பரவி வருகின்றன.
- இலங்கையில் போதைப்பொருள் மற்றும் மது அருந்திய ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இன்று முதல் இலங்கை எரிபொருள் விலையில் மாற்றம்
- கொழும்பில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் 204,000 போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இலங்கை இன்றைய வானிலை அறிக்கை
- இலங்கையில் ஏற்படும் பேரழிவுகளால் இதய நோய் அபாயம் 40 சதவீதம் அதிகரிக்கிறது.
You Might Be Interested In