இலங்கையின் பாதாள உலக குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைகள் ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வியாழக்கிழமை (11) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்த குற்றவாளிகள் தற்போது அந்தந்த நாடுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவை நிறைவடைந்தவுடன், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,” என்றார்.
இதேவேளை, ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இத்தகைய கைது நடவடிக்கைகள் பாதாள உலக குற்றங்களை ஒழிக்க பெரும் பங்களிப்பு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தமிழீழத்தில் நடைபெற்ற “2ம் லெப் மாலதி” அவர்களின் நினைவேந்தல்.
- இலங்கை ஜனாதிபதி தெருவில் நடந்து செல்லும்போது எங்கள் வீடுகளைப் பார்க்க முடியாதா?
- லண்டன்-கொழும்பு நேரடி விமான சேவை அக்டோபரில் மீண்டும் தொடங்குகிறது – பிரிட்டிஷ் ஏர்வேஸ்
- அணுசக்தி விளிம்பில் நரக நெருப்பு : அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்கள், ஈரானின் தகவமைப்புப் போர்முறை மற்றும் விளிம்பில் நிற்கும் பிராந்தியம்
- லண்டனை குறிவைத்து ஈரான் தாக்கும் திறன் இருப்பதாக எந்த மதிப்பீடும் இல்லை: பிரிட்டன் வீடமைப்பு செயலர்
- இலங்கையின் எதிர்கால சந்ததியினரை அறிவுள்ள, கருணையுள்ள மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளாக வளர்த்தெடுப்பதே எமது நோக்கமாகும். – சரோஜா சாவித்ரி
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை தொடர்பில் நாட்டில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.