படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் சனிக்கிழமை (13) விநியோகிக்கப்பட்டது.
யாழ். ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், அதனை சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது
கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை, நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன், வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை தாய், மற்றும் மருமகன் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
- சர்வதேச செவிலியர் தினம் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.
- முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.
- “இந்தியா–ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: புதிய கூட்டணியில் $200 பில்லியன் வர்த்தக இலக்கு நோக்கி முன்னேற்றம்”
- நினைவு வணக்கம் – அக்டோபர் 25
- தமிழ்த் தேசியத்தை துரோகம் செய்த தமிழரசுக் கட்சியின் சரணாகதி அரசியல்
- தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் 2025 – சுவிஸ்
நிமலராஜன் படுகொலைக்கு கடந்த இருபத்தைந்து, ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து வரும் நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக தொடர்ந்தும் யாழ் . ஊடக அமையம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



