படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் சனிக்கிழமை (13) விநியோகிக்கப்பட்டது.
யாழ். ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், அதனை சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது
கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை, நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன், வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை தாய், மற்றும் மருமகன் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
- உயிர்காக்க உதவிடுவோம்
- கோவை மாநகராட்சி பகுதிகளில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில், 100 இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- நினைவு வணக்கம் – செப்டம்பர் 18
- ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் போர் தீவிரம்: ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் உலக சக்திகளின் மோதல்
- 20.10.1996 முல்லைத்தீவு பூனைத் தொடுவாய் கடற் கண்காணிப்புத் தளத்தை தாக்குவதற்காக தரையிறக்கப்பட்ட படையினர் மீதான முறியடிப்பு சமர்.
- அல்லைப்பிட்டியில் “முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை” நினைவஞ்சலி! முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பரிமாறல்.
நிமலராஜன் படுகொலைக்கு கடந்த இருபத்தைந்து, ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து வரும் நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக தொடர்ந்தும் யாழ் . ஊடக அமையம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



