ஜார்க்கண்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் உடன் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
- பணமோசடி வழக்கில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.3,084 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது.
- மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்தியாவிலேயே முதன்முறையாக கொச்சி சர்வதேச விமான நிலையம் பயணிகள் போக்குவரத்திற்காக ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்துகிறது.
- இந்தியப் பிரதமர் மோடி சமூக ஊடகங்களில், “புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களை நான் நினைவில் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
- டி20 உலகக் கோப்பை: பாதுகாப்பு கவலைகள் காரணமாக இந்தியா பயணத்தை பங்களாதேஷ் நிறுத்தியது
- இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.