அமெரிக்காவின் டல்லாசில் இரண்டு விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு விமான நிலையங்களிலும் எப்போதும் ஏராளமான பயணிகள் விமானங்களில் பறப்பதைக் காணலாம்.

இந் நிலையில் அங்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிட்டத்தட்ட 1800க்கும் அதிகமான விமானங்களின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தொலைதொடர்பு சாதனங்கள் செயலிழந்ததே இதற்கு காரணம்.
விமான நிலைய கண்காணிப்பு கோபுரங்களில் ராடார் மற்றும் செல்போன் சிக்னல்கள் சரியாக செயல்படாததால் விமான கட்டுப்பாட்டு அறைகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 2 விமான நிலையங்களில் பல்வேறு விமான நிலையங்களின் 1800க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டது.
- மூளை-கணினி இணைப்பு ஆய்வில் புதிய கட்டம்: 21 பேருடன் நியூராலிங்க் மனித பரிசோதனைகளை விரிவுபடுத்தியது
- நவம்பர் 1ம் தேதி சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
- அமெரிக்கா மேலும் பல ஐசிசி நீதிபதிகளுக்கு தடைகள்: இஸ்ரேல் போர்க்குற்ற விசாரணையைச் சுற்றிய பதற்றம் தீவிரம்
- 2025 கவர்னர்ஸ் விருதுகளில் டாம் குரூஸுக்கு முதல் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது
- U.S. Capture of Nicolás Maduro Sparks Global Turmoil
- உலக தொழில்நுட்பம் திருப்புமுனையில்: CES 2026 வெளிப்படுத்திய புதிய எதிர்காலம்
அமெரிக்க விமான நிறுவனங்களின் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 500க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாகின. விமான நிலையத்துக்கு வரும் மற்றும் செல்லும் 700 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.