திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜ கவுசின்சிலர் அனில்குமார், தனது அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம் மாநகராட்சியின் திருமலை வார்டு கவுன்சிலராக பாஜவை சேர்ந்த அனில்குமார் உள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் தனது கட்சி அலுவலகத்திலேயே துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்தவுடன் வந்து ஆய்வு செய்த போலீசார், தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,அனில் குமார் காலையில் அலுவலகத்தில் காணப்பட்டதாகவும் பின்னர் இறந்து கிடந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். நாங்கள் மற்றநடவடிக்கைகளை முடித்து வருகிறோம். அனில்குமார் உடலுக்கு அருகிலிருந்து தற்கொலை குறிப்பு கடிதத்தை மீட்டுள்ளோம். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையில், பாஜ மாவட்டத் தலைவர் வி.வி. ராஜேஷ் கூறியதாவது:
வங்கியில் உள்ள நிதி சிக்கல்கள் குறித்து அனில் குமார் கவலையில் இருந்தார்.எனக்கு தெரிந்தவரை, வங்கியில் பலர், தாங்கள் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர். இதனால் அனில் குமார் மன அழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
- கேரளாவின் பல மாவட்டங்களில் தனியார் துறையில் செவிலியர் வேலைநிறுத்தம் தீவிரம்; மருத்துவ சேவைகள் பாதிப்பு
- “அறிவியலுடன் ஒன்றிணைந்து சுகாதாரத்திற்காகப் போராடுவோம்” – புது தில்லியில் இலங்கை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆற்றிய உரை
- வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில், வாக்காளர் சேவைகளை விரிவுபடுத்தும் தேர்தல் ஆணையம்
- வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து சென்னை, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- மணிப்பூரில் ரூ.40 கோடி மதிப்புள்ள ‘யாபா’ மாத்திரைகளுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
- தில்லி மல்வியா நகர் தீ விபத்து: பாதுகாப்பு குறைபாடுகள் வெளிச்சம் – உயிரிழப்பு 21 ஆக உயர்வு
இவ்வாறு ராஜேஷ் கூறினார்.