திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜ கவுசின்சிலர் அனில்குமார், தனது அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம் மாநகராட்சியின் திருமலை வார்டு கவுன்சிலராக பாஜவை சேர்ந்த அனில்குமார் உள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் தனது கட்சி அலுவலகத்திலேயே துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்தவுடன் வந்து ஆய்வு செய்த போலீசார், தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,அனில் குமார் காலையில் அலுவலகத்தில் காணப்பட்டதாகவும் பின்னர் இறந்து கிடந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். நாங்கள் மற்றநடவடிக்கைகளை முடித்து வருகிறோம். அனில்குமார் உடலுக்கு அருகிலிருந்து தற்கொலை குறிப்பு கடிதத்தை மீட்டுள்ளோம். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையில், பாஜ மாவட்டத் தலைவர் வி.வி. ராஜேஷ் கூறியதாவது:
வங்கியில் உள்ள நிதி சிக்கல்கள் குறித்து அனில் குமார் கவலையில் இருந்தார்.எனக்கு தெரிந்தவரை, வங்கியில் பலர், தாங்கள் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர். இதனால் அனில் குமார் மன அழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் வழிநடத்திய உளவு சதியில் முக்கிய குற்றவாளிக்கு 5.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
- சிறப்புச் செய்தி: வினாத்தாள் கசிவு; இந்தியாவில் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
- உலகம் முழுவதும் ‘X’ செயலிழப்பு: பதிவுகள், நேர்காணல்கள், டைம்லைன் ஏற்றுதல் பாதிப்பு
- தொழிலதிபர் விஜய் மல்லையா நாடு திரும்ப முடியுமா இல்லையா என்பதை தெளிவுபடுத்த மும்பை உயர் நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.
- “நக்சல் பிரச்சனைகளில் இருந்து இந்தியா விரைவில் விடுதலை பெறும்.” – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
- “டில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது.” மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ராஜேஷ் கூறினார்.