திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜ கவுசின்சிலர் அனில்குமார், தனது அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம் மாநகராட்சியின் திருமலை வார்டு கவுன்சிலராக பாஜவை சேர்ந்த அனில்குமார் உள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் தனது கட்சி அலுவலகத்திலேயே துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்தவுடன் வந்து ஆய்வு செய்த போலீசார், தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,அனில் குமார் காலையில் அலுவலகத்தில் காணப்பட்டதாகவும் பின்னர் இறந்து கிடந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். நாங்கள் மற்றநடவடிக்கைகளை முடித்து வருகிறோம். அனில்குமார் உடலுக்கு அருகிலிருந்து தற்கொலை குறிப்பு கடிதத்தை மீட்டுள்ளோம். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையில், பாஜ மாவட்டத் தலைவர் வி.வி. ராஜேஷ் கூறியதாவது:
வங்கியில் உள்ள நிதி சிக்கல்கள் குறித்து அனில் குமார் கவலையில் இருந்தார்.எனக்கு தெரிந்தவரை, வங்கியில் பலர், தாங்கள் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டனர். இதனால் அனில் குமார் மன அழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
- டெல்லியில் ஐ-எஸ்-ஐ’யுடன் தொடர்புடைய ஆயுதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
- கர்நாடகாவில் குளியலறை கீசரில் ஏற்பட்ட வாயு கசிவால் மூச்சுத் திணறி இரண்டு சகோதரிகள் உயிரிழந்தனர்.
- மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்திய மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்து, கேரளா அரசு சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
- பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளை; ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஜம்முவில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டபோது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இவ்வாறு ராஜேஷ் கூறினார்.