தியாக தீபன் திலீபம் அவர்களது இறுதி நாள் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலானது புதன்கிழமை (24.09.2025) திருகோணமலையில் சம்பூர் ஆலங்குலம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தலை மாவட்டம் தழுவிய ரீதியில் 26.09.2025 ந் திகதியன்று நடாத்துவது தொடர்பாக குறித்த கலந்துரையாடலின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவிக்கையில் 1987ம் ஆண்டு இலங்கையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போது இந்திய அமைதி காக்கும் படையினரால் இலங்கையில் ஏற்பட்ட அட்டூழியங்களுக்கு எதிராக யாழ் நல்லூர் கந்தசாமி கோயில் முன்றலில் உண்ணா விரதம் இருந்து தனது உயிரை தமிழினத்துக்காக தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வை உணர்ச்சி பூர்வமாக முன்னெடுக்க இக் கலந்துரையாடலானது இதற்காக 26.09.2025 அன்று திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெறும் இதில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ஏற்பாட்டு குழு சார்பாக அழைக்கிறோம் என்றார்.
- யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் கவனீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஒருபுறம், மத்திய கிழக்கு போர் நெருக்கடியால் ‘மகா வலி’; மறுபுறம், இலங்கை அரசாங்கத்தின் ‘மகா வலி’யையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.! – ரவிகரன் எம்.பி.
- ஞாயிற்றுக்கிழமை ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்
- தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை: பா.ஜ.க
- கிளிநொச்சி மாவட்ட கட்டளைப்பணியக துணைத் தளபதி ‘லெப்.கேணல் ஈழப்பிரியன்’ 31.12.2008
- மந்திரிமனையை பாதுகாக்க 14 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம் – தொல்லியல் துறை அறிக்கை