தியாக தீபன் திலீபம் அவர்களது இறுதி நாள் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலானது புதன்கிழமை (24.09.2025) திருகோணமலையில் சம்பூர் ஆலங்குலம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தலை மாவட்டம் தழுவிய ரீதியில் 26.09.2025 ந் திகதியன்று நடாத்துவது தொடர்பாக குறித்த கலந்துரையாடலின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவிக்கையில் 1987ம் ஆண்டு இலங்கையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போது இந்திய அமைதி காக்கும் படையினரால் இலங்கையில் ஏற்பட்ட அட்டூழியங்களுக்கு எதிராக யாழ் நல்லூர் கந்தசாமி கோயில் முன்றலில் உண்ணா விரதம் இருந்து தனது உயிரை தமிழினத்துக்காக தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வை உணர்ச்சி பூர்வமாக முன்னெடுக்க இக் கலந்துரையாடலானது இதற்காக 26.09.2025 அன்று திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெறும் இதில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ஏற்பாட்டு குழு சார்பாக அழைக்கிறோம் என்றார்.
- பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் ‘பிட்’ வைத்திருந்தாலும், அதை கண்டுபிடித்தாலும் தவறாக முடிவதாக தமிழக தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
- பேரழிவு நேரங்களில் மொழி புறக்கணிப்பு : இலங்கையின் மிகப் பெரிய தொடர்ச்சியான தேசிய தோல்வி
- தமிழ் இனப் படுகொலையின் 17வது ஆண்டு நினைவு நாள் – பெல்ஜியம்.
- காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திராவிட மாடல் அரசின் தாகம் தீரும்? – தமிழக பாஜ தலைவர்.
- தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 – சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு