ஒடிசாவில் பஸ்சும், லாரியும் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரியும் பயணிகளுடன் சென்ற பஸ்சும் மோதி, காலை 11 மணிக்கு விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். பின்னர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் பாசுதேவ் பெஹெரா கூறுகையில், ”சாலையில் பழுதுபார்க்கும் பணி காரணமாக பஸ் தவறான பாதையில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. ரூர்கேலாவிலிருந்து கொய்டாவுக்குச் சென்று கொண்டிருந்த போது பஸ் விபத்தில் சிக்கி உள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது”, என்றார்.
- பியோங்க்யாங்: தென் கொரிய ட்ரோன் ஊடுருவல்கள் குறித்து வட கொரியா புதிய குற்றச்சாட்டு
- தமிழக மீனவர்களால் தாக்கப்பட்ட பரித்திதுறை மீனவர் வழக்கில் நீதி கிடைக்கச் செய்யுமாறு ஆளுநரையும் உபாலி சமரசிங்கவையும் ரவிகரன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.
- “இந்தியா–ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: புதிய கூட்டணியில் $200 பில்லியன் வர்த்தக இலக்கு நோக்கி முன்னேற்றம்”
- கல்ஃப் நாடுகளுக்கு ஏவுகணை தாக்குதல்: ஈரான் அதிபர் பெசஷ்கியன் மன்னிப்பு — “இது மீண்டும் நடக்காது”
- ஓலா, உபர், ரேபிடோ இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
- அகிரா நந்தன் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்திய AI திரைப்படத்திற்கு தடை: தில்லி உயர்நீதிமன்றம் கடும் நடவடிக்கை