லெப். கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 38 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வானது, தென்மேற்கு இலண்டன் பகுதியில் உள்ள Mitcham
எனும் இடத்தில் சிறப்பாக நினைவு கூரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (05/10/2025) மாலை 6 மணி அளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது.

நிகழ்வில் பொதுச் சுடரினை நடன ஆசிரியை சுகி ஆனந் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை லெப்ரினன் கேணல் புலேந்திரன் அம்மானின் மகன் சீலன் அவர்கள் ஏற்றி வைத்தார், தொடர்ந்து ஈகைச் சுடரினை நடன ஆசியை சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
- தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 17வது நாளாக தொடரும் ஈருருளிப் பயணம் சுவிஸ் நாட்டில் தொடர்கிறது.
- கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி – நெதர்லாந்து
- HMRC IN 2026: READ THIS BEFORE THEY WRITE TO YOU
- டறம் நியூகாசில் தமிழ்ச்சங்கம் பெருமகிழ்வுடன் கொண்டாடும் தமிழர் புத்தாண்டுப் பொங்கல் திருநாள் 2026
- குழந்தைகள் பயணம் செய்யும் கார்களில் வேப்பிங் தடை செய்ய அரசு பரிசீலனை — பள்ளிகள், விளையாட்டு மைதானங்களிலும் கட்டுப்பாடு முன்மொழிவு
- வளைகுடாவில் பிரிட்டனின் கடற்படை இல்லாத காலம் தொடக்கம்
அகவணக்கத்தினை தொடர்ந்து, திருவுருவப் படங்களுக்கான மலர் மாலையினை திருமதி றயனி மற்றும் திருமதி சுபாசினி அவர்கள் அணிவித்திருந்தார்கள்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் எழுச்சி உரை,கவிதை, நடனம், நினைவுரை, உறுதியுரை போன்ற எழுச்சி நிகழ்வுகளும் அரங்கேறியிருந்தன.
தேசியக்கொடி கையேந்தலுடன் , மாவீரர்களின் கனவு நினைவாக பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.









