லெப். கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 38 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வானது, தென்மேற்கு இலண்டன் பகுதியில் உள்ள Mitcham
எனும் இடத்தில் சிறப்பாக நினைவு கூரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (05/10/2025) மாலை 6 மணி அளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது.

நிகழ்வில் பொதுச் சுடரினை நடன ஆசிரியை சுகி ஆனந் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை லெப்ரினன் கேணல் புலேந்திரன் அம்மானின் மகன் சீலன் அவர்கள் ஏற்றி வைத்தார், தொடர்ந்து ஈகைச் சுடரினை நடன ஆசியை சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
- ஆட்டிசம் விகிதங்களில் பாலின வேறுபாடு குறைகிறது: புதிய ஆய்வு நீண்டநாள் நம்பிக்கைகளை சவாலுக்கு உட்படுத்துகிறது
- தமிழர் கலைபண்பாட்டுப் பாசறை பிரித்தானியா – ஈழத்தாரகை 2026
- அவசர நிதி உதவி திட்டம்: இங்கிலாந்தில் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு புதிய ஆதரவு
- அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026
- தேசிய மாவீரர் நினைவு சுமந்த கரப்பந்தாட்டம் 2025 – நெதர்லாந்து
- “கான்செட்டின் கண்ணீரில்—40 லாரிகள் இணைந்து 14 வயது ஆரன் ஆண்டர்சனுக்கு இறுதி மரியாதை”
அகவணக்கத்தினை தொடர்ந்து, திருவுருவப் படங்களுக்கான மலர் மாலையினை திருமதி றயனி மற்றும் திருமதி சுபாசினி அவர்கள் அணிவித்திருந்தார்கள்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் எழுச்சி உரை,கவிதை, நடனம், நினைவுரை, உறுதியுரை போன்ற எழுச்சி நிகழ்வுகளும் அரங்கேறியிருந்தன.
தேசியக்கொடி கையேந்தலுடன் , மாவீரர்களின் கனவு நினைவாக பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.









