26
வெள்ளிக்கிழமை (10.10.2025) இடம்பெற்ற இந்த திடீர் நடவடிக்கையின் போது, 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனையின் போது மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
You Might Be Interested In
- மாவீரர் வார தொடக்கத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி
- கடற்புலி மேஜர் சிவகாந்தன் (காந்) | 16.09.2001
- அகவை வாழ்த்து – செப்டம்பர் 30
- “மன்னர் மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கெடுக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது” – செல்வம் அடைக்கலநாதன்
- மூதூர் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு முன்னாள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
- வீரவேங்கை சமர்வேங்கை | 23.02.2007
You Might Be Interested In