வீரப்பெண்ணாகவும் தமிழ்ப் பெண்ணினத்தின் விடுதலைக்கு வழிகாட்டியாகவும் சாதனை படைத்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியத்தில் 12.10.2025 14:30 மணிக்கு இந் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழத் தேசிய கீதத்துடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர்வணக்கம் சுடர்வணக்கத்தைத் தொடர்ந்து பிரதான உரையுடன் சூரியப்புதல்வி பாகம்-2 இசைப் பேழை வெளியீடு செய்யப்பட்டது.
இசைப் பேழையின் பாடல்களுடன் பாடலின் விளக்க உரைகளும் மகளிர் உறுப்பினர்களால் உரையாற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து 2ம் லெப்.மாலதி அவர்களின் வரலாறு சார்ந்த சிறப்புரைகளும் எழுச்சிப்பாடல்கள், கவிதை,பேச்சு என பல நிகழ்வுகளுடன் ஈழத்தமிழர்கள் நிறைந்த மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.
தமிழீழத் தேசியக் கொடி கையேந்தலைத் தொடர்ந்து “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தமிழரின் தாரகமந்திரத்துடன் வீரவணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.
- உக்ரைன் பயணிகள் ரயிலில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்: ஐந்து பேர் பலி
- தியாகமும் தேசியமும்: ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் அதன் அத்தியாவசியப் பங்கு
- “மன்னர் மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கெடுக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது” – செல்வம் அடைக்கலநாதன்
- ‘தமிழக மீனவர்களுக்கு, மத்திய அரசு உறுதுணையாக நிற்கும்.’ என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- பாலியல் தொழிலும் – விஜயின் அரசியலும் !
- யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்!