44
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி செவ்வாய்க்கிழமை (20.10.2025) உயிரிழந்துள்ளார்.
You Might Be Interested In
- நினைவு வணக்கம் – செப்டம்பர் 23
- நினைவு வணக்கம் | டிசம்பர் 29
- பருத்தித்துறை துறைமுக மேம்பாடு குறித்து இந்தியக் குழு ஆய்வு நடத்துகிறது.
- ஏப்ரல் மாதத்திற்குள் சோமாலியாவில் ஐ.நா. அவசர உணவுதொகை நிறுத்தப்படலாம்: கடும் பசியால் எச்சரிக்கை
- கப்டன் தமிழரசன் (சிவா) 08.02.1997
- யேர்மனியில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.
You Might Be Interested In