இந்நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அவர்களது கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

போர் சூழலில் இவர் யாழிலிருந்து, துணிவுள்ள ஊடகவியலாளராக பணியாற்றி இருந்தார். இதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.
- உக்ரைனில் ரஷ்யாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கு அருகில் தாக்குதல் விமானங்கள்
- பிரான்ஸ்’க்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது ஈருருளிப்பயணம்!
- தண்ணீர் மாநாடு மாபெரும் வெற்றி | நன்றிக்கு உரியவர்கள் யார் யார் ?
- இன்று (21.09.2025) மகாளய அமாவாசை – காகத்திற்கு உணவிடுங்கள்.
- “அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, திமுகவின் ஊழல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயமாக பொறுப்பேற்கப்படுவார்கள்” என்று இபிஎஸ் கூறினார்.
- புளோரிடாவின் டம்பாவில் ஒரு கட்டிடத்திற்கு வெளியே ஒரு கார் கூட்டத்தின் மீது மோதியதில் நான்கு பேர் இறந்தனர், குறைந்தது 13 பேர் காயமடைந்தனர்

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக் குண்டுத்தாக்குதலையும் மேற்கொண்டனர்.
இதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
