உ.பி.,யில் உள்ள அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டுமான பணிக்கான நிதி திரட்டும் பிரசாரம் கடந்த, 2022ல் துவங்கியது.

கடந்த ஆண்டு ஜனவரி, 22ல் கோவில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில், நவ.,25ல் கோவில் கொடியேற்று விழா நடக்கிறது. இதையொட்டி, ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா நேற்று அளித்த பேட்டி:
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பொது மக்கள், 3,000 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தனர். கோவில் கட்டுமான பணிகள், 1,800 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், 1,500 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
- அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் உமர் காலித் வழக்கில் கவலை வெளிப்படுத்தினர்
- நவம்பர் 10 ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவையைத் தொடங்குவதாக இண்டிகோ அறிவித்துள்ளது.
- கொல்கத்தாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.
- அமெரிக்க செயற்கைக்கோளை, வணிக ரீதியில் அடுத்த மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
- சோனமார்க் சர்பல் பகுதியில் பெரும் பனிச்சரிவு: வீடுகள், வாகனங்கள் பனிக்குள் புதைந்தன
- இந்தியாவின் பேட்டரி உற்பத்தி ஊக்கத்திட்டம் இலக்குகளை எட்டாமல் திணறுகிறது
நவ.,25ல் நடக்கும் கொடியேற்ற நிகழ்வில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்றுவார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டுமான பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். இதில், 8,000 பக்தர்கள் பங்கேற்கின்றனர். – இவ்வாறு அவர் கூறினார்.