மெக்சிகோவின் சோனோராவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் வழக்கம் போல் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் உதவ, உள்துறை அமைச்சருக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம், சோனோரா மாநில கவர்னர் அல்போன்சோ இரங்கல் தெரிவித்தனர். திடீரென தீப்பற்றியதுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
- ரஷ்யா அரிதாகப் பயன்படுத்தும் ‘ஓரெஷ்னிக்’ அதிவேக ஏவுகணை உக்ரைனில் தாக்குதல் நடத்துகிறது
- மே தின ஊர்வலம் 2026 – பிரான்சு
- ஓமன் மற்றும் குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் எச்சரித்துள்ளன.
- ஆட்டிசம் விகிதங்களில் பாலின வேறுபாடு குறைகிறது: புதிய ஆய்வு நீண்டநாள் நம்பிக்கைகளை சவாலுக்கு உட்படுத்துகிறது
- கிலிமஞ்சாரோ மலையில் ஹெலிகாப்டர் விபத்து: ஐவர் பலி
- கல்ஃப் நாடுகளுக்கு ஏவுகணை தாக்குதல்: ஈரான் அதிபர் பெசஷ்கியன் மன்னிப்பு — “இது மீண்டும் நடக்காது”