திருகோணமலை | 19.11.2025 – வெருகல் பகுதியைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா வெருகல் கலாசார மண்டபத்தில் இன்று புதன்கிழமை (19.11.2025) காலை நடைபெற்றது.

இதன்போது மாவீரர் பெற்றோர் மேள தாளங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன் பின்னர் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெருகல் பகுதியைச் சேர்ந்த 150 மாவீரர் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கணேசபிள்ளை குகன், மாவட்ட நிருவாகச் செயலாளர் சி.அகிலன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- செம்மணி மனித புதைகுழிகளில் வெள்ளம்; வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. அவர்களின் 71வது பிறந்தநாள் – கென்ட், பிரித்தானியா பகுதியில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
- மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை’யின் 35வது ஆண்டு நிறைவு.
- நிகழ்காலத் தேவை: அறிவியல் துல்லியத்தையும் பொதுச் சுகாதாரத்தையும் மேம்படுத்த உள்ளடக்கிய மருத்துவப் பரிசோதனைகள் வடிவமைத்தல்.
- பொண்டி தாக்குதல்காரர் சாஜித் அக்ரம்: இந்திய காலவரிசையில் புதிய மர்ம இடைவெளிகள் வெளிச்சம்
- துபாய்-ஹைதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.




