
இலங்கை அரசுக்கு எதிராக 2022ல் நடந்த போராட்டத்தில், பொதுஜன பெரமுனா கட்சி எம்.பி., அமரகீர்த்தி அதுகோரளே கொல்லப்பட்ட வழக்கில், 16 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதில், 12 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இலங்கையில் கடந்த 2022 ஜூலையில் கடுமையான பொருளாதார நெருக்கடி, எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் நாடு முழுதும் மக்கள் போராட்டம் வெடித்தன.
போராட்டக்காரர்கள் தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு கைப்பற்றினர். இதையடுத்து, அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவங்களுக்கு முன்னதாக 2022 மே 9ல், அப்போதைய ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனாவின் எம்.பி., அமரகீர்த்தி அதுகோரளே, பொலன்னறுவா தொகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அவரது வாகனம் கூட்டத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அவரையும், அவரது பாதுகாப்பு அதிகாரி ஜயந்த குணவர்தனேவையும் கடுமையாக தாக்கினர். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
- இலங்கையில் அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு – ஜனாதிபதி
- உத்தரப்பிரதேசத்தில் காரும் சரக்கு லாரியும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
- இன்றைய இலங்கை வானிலை அறிக்கை
- போர்க்குற்றங்கள் குறித்து சாட்சியமளிக்கத் தயார்: சோமரத்ன ராஜபக்ஷவின் பிரமாணப் பத்திரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
- வெளிநில வாழ்வோர் கோப்புகள் எப்போது? டிரம்ப் வெளியிடுவேன் என்ற வாக்குறுதி இன்னும் ஏன் நிறைவேறவில்லை?
- பனையூர் பண்ணையாரின் அநாகரீக அரசியல் !
இந்த வழக்கில் 41 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், 16 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. அதில், 12 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.