
இலங்கை அரசுக்கு எதிராக 2022ல் நடந்த போராட்டத்தில், பொதுஜன பெரமுனா கட்சி எம்.பி., அமரகீர்த்தி அதுகோரளே கொல்லப்பட்ட வழக்கில், 16 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதில், 12 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இலங்கையில் கடந்த 2022 ஜூலையில் கடுமையான பொருளாதார நெருக்கடி, எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் நாடு முழுதும் மக்கள் போராட்டம் வெடித்தன.
போராட்டக்காரர்கள் தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு கைப்பற்றினர். இதையடுத்து, அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவங்களுக்கு முன்னதாக 2022 மே 9ல், அப்போதைய ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனாவின் எம்.பி., அமரகீர்த்தி அதுகோரளே, பொலன்னறுவா தொகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அவரது வாகனம் கூட்டத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அவரையும், அவரது பாதுகாப்பு அதிகாரி ஜயந்த குணவர்தனேவையும் கடுமையாக தாக்கினர். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
- இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது நாட்டின் மிகப்பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளது.
- வடகிழக்கு தமிழ் கட்சிகளிடையே கொள்கை ரீதியான ஒருமித்த கருத்து ஆரம்பம்; தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் முக்கிய நடவடிக்கை.
- புயல் சூறாவளியாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை – இலங்கை வானிலை ஆய்வு மையம்
- தமிழகத்தில் 8.27 லட்சம் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் 26 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
- திலீபன் மற்றும் திலீபம்: தமிழர் எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாற்று மற்றும் கோட்பாட்டு அடித்தளம்
- உலக சந்தை அதிர்வால் இலங்கையில் தங்க விலை மீண்டும் உயர்வு
இந்த வழக்கில் 41 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், 16 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. அதில், 12 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.