‘டி-20’ உலக கோப்பை அரங்கில் முதல் வெற்றி பெற்றது இத்தாலி. நேற்று நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை, லீக் போட்டியில் இத்தாலி, நேபாள அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இத்தாலி, பீல்டிங் தேர்வு செய்தது.
முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக போராடி தோற்றது நேபாளம். இதனால் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
மாறாக நேபாள அணி துவக்கத்தில் இருந்து தடுமாறியது. குஷால் 5 ரன்னில் திரும்ப, ஆசிப் (20), கேப்டன் ரோகித் பவுடல் (23) ஜோடி சற்று தாக்குப் பிடித்தது. திபேந்திர சிங், 17 ரன் எடுத்தார்.
நேபாள அணி 19.3 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.கரண் (18) அவுட்டாகாமல் இருந்தார். இத்தாலி சார்பில் கிரிஷன் 3, மனென்டி 2 விக்கெட் சாய்த்தனர்.
இத்தாலி அணிக்கு ஜஸ்டின் மோஸ்கா, ஆன்டனி மோஸ்கா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இத்தாலி அணி 6 ஓவரில் 68/0 ரன் குவித்தது.
- சவூதி பேருந்து தீ விபத்தில் உயிர் பிழைத்த ஒரே இந்தியர் ஐ.சி.யூவில் உயிருக்குப் போராடுகிறார்.
- ‘பிரீமியம்’ என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மீது அபராதம்
- மெல்போர்ன் பூங்காவில் வரலாற்று ஹாட்ரிக் நோக்கி நம்பிக்கையுடன் சின்னர் பயணம் தொடக்கம்
- கொல்கத்தாவுக்கு எதிரான லீக் போட்டியில் விராட் கோலி அடித்த அற்புதமான சதம், பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.
- இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியது; உச்சி மாநாட்டுக்கு முன் பேச்சுவார்த்தைகள் வேகமெடுக்கும்
- பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானத்தில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு!
ஜஸ்டின் 37 பந்தில் அரைசதம் அடித்தார். ஆன்டனி, 28 பந்தில் அரைசதம் கடந்தார். நேபாள அணி 12.4 ஓவரில் 124/0 ரன் எடுத்து வென்றது. ஜஸ்டின் (60), ஆன்டனி (62) அவுட்டாகாமல் இருந்தனர்.