சென்னையில் வார தொடக்க நாளான இன்று (பிப்ரவரி 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து , ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) தங்கம் விலை கிராமுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 14,560 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,280 ரூபாய் அதிகரித்து, 1,16,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.நேற்று (பிப்ரவரி 15) தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 960 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
- தமிழகப் பிரசாரத்தை தொடங்கிய மோடி, ஆளும் திமுக அரசை குற்றம் சாட்டி விமர்சனம்
- திமுக’வை காங்கிரசிலிருந்து பிரிக்க வேண்டும் என்ற பாஜக’வின் ஆசை நிறைவேறாது!
- மூலிகை வேளாண்மை மாநாட்டை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி: இயற்கை விவசாய வளர்ச்சிக்கு புதிய உந்துதல்
- தமிழக குவாரி வாகனங்களின் விதிமீறல் குறித்து உயர் நீதிமன்றத்தில் தகவல்
- சென்னையில் தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டை திமுக மாணவர் அணியினர் முற்றுகையிட்டனர்.
- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கோவிலில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை