Table of Contents
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாத காரணத்தினால் எரிபொருள் விநியோகத்துக்கான QR குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இதற்கு முன்பு நாடு எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடி நிலைமையின்போது மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோக முறை கடைபிடிக்கப்பட்டதால் எரிபொருள் விநியோகத்துக்காக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டில் போதுமான அளவுக்கு எரிபொருள் இருக்கிறது.
தேவை ஏற்பட்டால், QR குறியீடு முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
