தமிழகத்தில் ஜனவரி மாதம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளில், 29 சதவீதம் தரமற்றவை என தெரிய வந்துள்ளது.
நாடு முழுதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில், மத்திய — மாநில அரசுகள் மாதந்தோறும் ஆய்வுகளும் பரிசோதனைகளும் செய்கின்றன.
மருந்தகங்கள், சில்லரை விற்பனையகங்கள், மொத்த விற்பனை கூடங்கள், கிடங்குகள், உற்பத்தி அலகுகளில் ஏதேனும் சில மருந்துகளை எடுத்து பரிசோதிக்கப்படுகிறது.
மருந்து கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி உற்பத்தி செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
அவ்வாறு இல்லாதபட்சத்தில், அவை தரமற்ற மருந்துகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
- இரானில் பல வெடிப்புகள்: இஸ்ரேல் தொடர்பு இல்லை என உறுதியான மறுப்பு
- சென்னையில் தங்கத்தின் விலை கடுமையாக சரிவு: இரண்டு நாட்களில் ரூ.2,800 சரிவு.
- மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல் அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி.
- இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை
- தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்ட ‘256 அறிவிப்புகள் சாத்தியமில்லை.’ – என்பதால் கைவிட முடிவு!
- பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் பிரான்ஸ் இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கனடாவுடன் இணைகிறது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் நாடு முழுதும், 1,000த்திற்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில், 29 சதவீதம் அதாவது 215 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 43 மருந்துகள் இடம்பெற்று உள்ளன.
அதேபோல், கர்நாடகாவில் 21 சதவீதமும், ராஜஸ்தானில் 17 சதவீதமும் தரமற்ற மருந்துகள் இருந்தன.