தமிழகத்தில் ஜனவரி மாதம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளில், 29 சதவீதம் தரமற்றவை என தெரிய வந்துள்ளது.
நாடு முழுதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில், மத்திய — மாநில அரசுகள் மாதந்தோறும் ஆய்வுகளும் பரிசோதனைகளும் செய்கின்றன.
மருந்தகங்கள், சில்லரை விற்பனையகங்கள், மொத்த விற்பனை கூடங்கள், கிடங்குகள், உற்பத்தி அலகுகளில் ஏதேனும் சில மருந்துகளை எடுத்து பரிசோதிக்கப்படுகிறது.
மருந்து கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி உற்பத்தி செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
அவ்வாறு இல்லாதபட்சத்தில், அவை தரமற்ற மருந்துகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
- ‘ஒரு போதும் உண்மை பேசாத திமுக’ என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
- 2026 தேர்தலை முன்னிட்டு NDA கூட்டணி பேச்சுவார்த்தை வேகம்
- மட்டக்களப்பு களுவதாவளை சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் “சூரன்போர்” வெகு சிறப்பாக நடந்தேறியது.
- மட்டக்களப்பு மாவட்ட “முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை” அவர்கள் தனது 86 வது வயதில் காலமானார்.
- உலக ஒழுங்கின் மறுசீரமைப்பா? புதினின் எச்சரிக்கைகள், உக்ரைன் போர், ஸ்டார்மரின் ராஜினாமா மற்றும் ஐரோப்பாவின் அரசியல் நிலநடுக்கம்
- இரானில் ஆட்சிமாற்றம் ‘நடக்கக்கூடிய சிறந்த விஷயம்’ என டிரம்ப் கருத்து; மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவப் பங்கு அதிகரிப்பு
அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் நாடு முழுதும், 1,000த்திற்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில், 29 சதவீதம் அதாவது 215 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 43 மருந்துகள் இடம்பெற்று உள்ளன.
அதேபோல், கர்நாடகாவில் 21 சதவீதமும், ராஜஸ்தானில் 17 சதவீதமும் தரமற்ற மருந்துகள் இருந்தன.