மலையாள திரையுலகில், 2021ல் பசில் ஜோசப் நடிப்பில் வெளியான ஜான்.இ.மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம்.
அதன்பின், 2024ல் தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி, மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார்.
இது, கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தற்போது இயக்குநர் சிதம்பரம், ஹிந்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவர் மீது எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அதில், ‘கொச்சியின் எலம்குளம் பகுதியில் உள்ள என் அடுக்குமாடி குடியிருப்புக்குள், 2022ல் அத்துமீறி நுழைந்த இயக்குநர் சிதம்பரம், என்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, குறிப்பிட்டுள்ளார்.
- இலங்கையில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச பொறுப்புக்கூறலும் முழு ஆதரவும் அவசியம்.
- “இண்டிகோ விமானம் நடுவானில் ஒரு பிரச்சனையை சந்தித்ததால்”, 160 பயணிகள் சிக்கித் தவித்தனர்.
- கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 8 மணி நேர நீர் வெட்டு
- திமுக அமைச்சர் நேரு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
- திருச்சி காவல்துறையினர் பனைத் தொழிலாளர்களைக் கடுமையாகத் தாக்கி, பொய் வழக்கில் சிறையில் அடைத்திருப்பது கொடுங்கோன்மையாகும்!’ – செந்தமிழன் சீமான்
- துபாயில் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள்: குடியிருப்பு பகுதிகளில் பதட்டம் வெடிப்பு
இதன்படி, சிதம்பரம் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு விரைவில் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்து சிதம்பரம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.