யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெற்றோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெற்றோலை பெற்று சென்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெற்றோலை பெற்று கொள்ளும் இந்நிலைமை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் நீடித்து வரும் நிலையில் , கடந்த சனிக்கிழமை முதல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 7 இலட்சத்து 45 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் சுமார் 5 இலட்சம் லீற்றர் பெற்றோல் கொள்வனவு செய்யப்படும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற பயத்தின் காரணமாக தேவைக்கு அதிகமான நுகர்வு செய்யப்படுவதனால் , 4 நாட்களில் சுமார் இரண்டரை இலட்சம் லீற்றர் பெற்றோல் நுகரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினமும் யாழ்ப்பாணத்திற்கு , பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்க 3 இலட்சத்து 10 ஆயிரத்து 200 லீற்றர் பெற்றோல் கொலன்னவளையில் இருந்து பவுசர்களில் கொண்டு வரப்பட்டு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் , இன்றைய தினம் புதன்கிழமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
- “கரும்புலி மில்லர்” என்ற மாவீரரின் பெயரை வர்த்தகச் சினிமாவிற்கு பயன்படுத்துவது – தமிழர் தியாக வரலாற்றை அவமதிக்கும் செயல். – ஈழத்து நிலவன்
- அகவை வாழ்த்து – நவம்பர் 23
- சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- தீருவில் தீ | 05.10.1987
- நினைவு வணக்கம் – அக்டோபர் 08
- மூதூரில் உள்ள மெங்காமம் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டுத் தோட்டப் பயிர்களை சேதப்படுத்தியது – மக்கள் கவலை.