130
கடந்த 6ம் தேதி உத்தர பிரதேசத்தின் ருத்ரபிரயாக்கின் கோட்வாலி போலீஸ் நிலைய பகுதியில் வீடு ஒன்றிலிருந்து, கெட்ட நாற்றம் வந்தது. அருகில் வசித்தவர்கள், போலீசாருக்கு தகவல்கொடுத்தனர்.
போலீசார் வந்து பார்த்த போது, அந்த வீட்டில் இருந்த, 38 வயது பெண்ணும், அவரின் மகளான சிறுமியும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த தீபக் பகதுார் என்ற நேபாள நாட்டைச் சேர்ந்தவரை காணவில்லை.
இதனால் அவரை உ.பி. போலீசார் தேடினர். அவர் புதுடில்லி ரயில் நிலையம் பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. டில்லி போலீசார் உதவியை உ.பி. போலீசார் நாடினர்.
அதன் படி டில்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், தீபக் பகதுார் என்ற அந்த நேபாள நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை உ.பி. போலீசார் வசம் டில்லி போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.
You Might Be Interested In
- வான்வழி கட்டுப்பாடுகள் நீடித்தாலும், ஐந்து சிறப்பு விமானங்களில் 1,600‑க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாய்நாட்டுக்கு திரும்பினர்
- சபரிமலையில் பெண்கள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
- இன்ஸ்டாமார்ட் வளர்ச்சியால் ஸ்விக்கி காலாண்டு இழப்பை குறைத்தது
- டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு: கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்குகிறது
- பணமோசடி வழக்கில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.3,084 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது.
- மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது; இன்றிரவு கரையைக் கடக்கும்!
You Might Be Interested In