138
கடந்த 6ம் தேதி உத்தர பிரதேசத்தின் ருத்ரபிரயாக்கின் கோட்வாலி போலீஸ் நிலைய பகுதியில் வீடு ஒன்றிலிருந்து, கெட்ட நாற்றம் வந்தது. அருகில் வசித்தவர்கள், போலீசாருக்கு தகவல்கொடுத்தனர்.
போலீசார் வந்து பார்த்த போது, அந்த வீட்டில் இருந்த, 38 வயது பெண்ணும், அவரின் மகளான சிறுமியும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த தீபக் பகதுார் என்ற நேபாள நாட்டைச் சேர்ந்தவரை காணவில்லை.
இதனால் அவரை உ.பி. போலீசார் தேடினர். அவர் புதுடில்லி ரயில் நிலையம் பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. டில்லி போலீசார் உதவியை உ.பி. போலீசார் நாடினர்.
அதன் படி டில்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், தீபக் பகதுார் என்ற அந்த நேபாள நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை உ.பி. போலீசார் வசம் டில்லி போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.
You Might Be Interested In
- “சோனிபட்டில் லிப்ட் கேட்ட பெண் காரில் பாலியல் வன்முறைக்கு உள்ளானது: இரு குற்றவாளிகளுக்கு தீவிர தேடுதல்”
- ‘ஆமதாபாத் விமான விபத்து: விமானிகள் மீது குற்றஞ்சாட்டுவது பொறுப்பற்ற செயல்; துரதிருஷ்டவசமானது’ என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- வட இந்தியாவில் கடும் குளிர் தீவிரம்; டெல்லியில் 4.2°C — சீசனின் மிகக் குளிரான காலை
- இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீது அதிகரிக்கும் வெறுப்பு தாக்குதல்கள்: தீவிர இந்து குழுக்களின் அச்சுறுத்தல் உயர்வு
- வெற்றிகரமான ஜி20 உச்சி மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என்று இந்தியப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- ”இந்திய மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி திறன், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம்,” – இந்திய மத்திய நிதியமைச்சர்
You Might Be Interested In