கேரளாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் கல்வியாளருமான கே.என். பணிக்கர் (90) நேற்று முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
நவீன இந்திய வரலாற்றை படிப்பதில் முற்போக்கான கண்ணோட்டங்களை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பணிக்கர்.
கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் பிறந்த இவர், தன் உயர்படிப்புக்குப்பின் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் வரலாற்று ஆசிரியராக இணைந்தார். அதன்பின், அத்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
கடந்த 2001 – 17 வரை கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன தலைவராகவும் பதவி வகித்தார். இந்திய வரலாற்றில், காலனித்துவம் மற்றும் நவீனத்துவம் குறித்து பல படைப்புகளை இயற்றியுள்ளார்.
வரலாற்று துறையில் மார்க்சிய கொள்கையையும், மதசார்பற்ற மற்றும் அறிவியல் அணுகுமுறைகளை ஆதரித்ததற்காகவும் பரவலாக இவர் அறியப்பட்டார்.
- ஸ்வாமி விவேகானந்தர் | 12 ஜனவரி 1863
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.
- மிட்செல் மாஸ்டர்‑கிளாஸ்: நியூசிலாந்து தொடர் சமநிலை
- 2047க்குள் 400க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள்: இந்தியாவை உலக விமான மையமாக மாற்றும் பசுமை எரிபொருள் இலக்கை பிரதமர் மோடி அறிவிப்பு
- டி20 உலகக் கோப்பை: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 பந்துகள் மீதமுள்ள நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஐரோப்பிய ஒன்றியம்–இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்
இவரது மனைவி ஏற்கனவே காலமான நிலையில், இரண்டு மகள்களுடன் பணிக்கர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார்.
வயது மூப்பு காரணமாக சமீபத்தில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.