கேரளாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் கல்வியாளருமான கே.என். பணிக்கர் (90) நேற்று முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
நவீன இந்திய வரலாற்றை படிப்பதில் முற்போக்கான கண்ணோட்டங்களை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பணிக்கர்.
கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் பிறந்த இவர், தன் உயர்படிப்புக்குப்பின் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் வரலாற்று ஆசிரியராக இணைந்தார். அதன்பின், அத்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
கடந்த 2001 – 17 வரை கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன தலைவராகவும் பதவி வகித்தார். இந்திய வரலாற்றில், காலனித்துவம் மற்றும் நவீனத்துவம் குறித்து பல படைப்புகளை இயற்றியுள்ளார்.
வரலாற்று துறையில் மார்க்சிய கொள்கையையும், மதசார்பற்ற மற்றும் அறிவியல் அணுகுமுறைகளை ஆதரித்ததற்காகவும் பரவலாக இவர் அறியப்பட்டார்.
- டில்லி மெட்ரோவின் திட்டத்தின் கீழ் மூன்று புதிய வழித்தடங்கள் அமைக்க, டில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது!
- ஏர் இந்தியா விமானத்தில் மற்றொரு சிக்கல்; போயிங் 787 விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
- இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: இந்திய மருந்துத் தொழில் மற்றும் மெட்டெக் துறைக்கு புதிய வாய்ப்புகள்
- இத்தாலிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
- ‘ஓட்டுத் திருட்டு’ குறித்து காங்கிரஸ் நடத்தும் போராட்டத்துக்கும், இண்டி கூட்டணிக்கும் எந்தத் தொடர்புமில்லை, – உமர் அப்துல்லா.
இவரது மனைவி ஏற்கனவே காலமான நிலையில், இரண்டு மகள்களுடன் பணிக்கர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார்.
வயது மூப்பு காரணமாக சமீபத்தில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.