மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து 6 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதி மூடப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
எனவே, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பிற வழிகளில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
அதன் ஒரு கட்டமாக, அடுத்த மாத தேவைக்கு ரஷ்யாவிடம் இருந்து 6 கோடி பேரல் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுஉள்ளது. இது பிப்ரவரியில் கொள்முதல் செய்ததை விட அதிகம்.
- தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் இன்றும், நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அவசர சுகாதார எச்சரிக்கை: ஐக்கிய இராச்சியத்தில் நோரோவைரஸ் தொற்றுகள் தீவிரமாக உயர்வு
- தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் எனக்கூறி ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 111 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
- 2025 ஐரோப்பா பயண விதிமுறைகள்: எல்லை சோதனைகள், சுற்றுலா வரிகள் மற்றும் நடத்தை கட்டுப்பாடுகள்
- உச்ச நீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு
- தேவைப்பட்டால், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பைக் கோரலாம் என்று இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது.
‘ப்ளூம்பெர்க்’ அறிக்கையின்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் வெனிசுலாவிலிருந்து 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த 2020ல் இறக்குமதி செய்த அளவை விட மிக அதிகம்.
கச்சா எண்ணெய் இறக்கு மதிக்கு மேற்காசியாவை மட்டும் நம்பி இருக்காமல், ரஷ்யா, வெனிசுலா என மாற்று வழிகளில் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.