மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து 6 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதி மூடப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
எனவே, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பிற வழிகளில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
அதன் ஒரு கட்டமாக, அடுத்த மாத தேவைக்கு ரஷ்யாவிடம் இருந்து 6 கோடி பேரல் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுஉள்ளது. இது பிப்ரவரியில் கொள்முதல் செய்ததை விட அதிகம்.
- மாதவரம் பால் பண்ணையில் உற்பத்தி முடக்கம்! ஆவின் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
- உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- இத்தாலிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது.
- தசாப்தக் காத்திருப்பா? அல்லது திசைமாறும் அரசியல் வியூகமா?
- இலங்கை பொதுக் கல்வித் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 340,525 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளனர்.
‘ப்ளூம்பெர்க்’ அறிக்கையின்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் வெனிசுலாவிலிருந்து 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த 2020ல் இறக்குமதி செய்த அளவை விட மிக அதிகம்.
கச்சா எண்ணெய் இறக்கு மதிக்கு மேற்காசியாவை மட்டும் நம்பி இருக்காமல், ரஷ்யா, வெனிசுலா என மாற்று வழிகளில் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.