கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 2000 கடல் அட்டைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளையின் ‘இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண’ பிரிவின் பள்ளிக்குடா கடற்படை வரிசைப்படுத்தல் பிரிவினர் வியாழக்கிழமை 12 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்குடா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வண்டி ஒன்றைக் கடற்படையினர் வழிமறித்துச் சோதனை செய்தனர்.
இதன்போது, எவ்விதமான சட்டப்பூர்வ அனுமதியுமின்றி கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2000 கடல் அட்டைகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து, குறித்த வாகனத்துடன் மூன்று சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டனர்.
- மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
- கிட்டு பீரங்கிப் படையணி லெப்.கேணல் தர்சன் 04.11.2000
- லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ்
- யாழ்ப்பாணம் கலட்டிச் சந்தியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
- பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிறிலங்கா பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
- இலங்கை ஜனாதிபதி தெருவில் நடந்து செல்லும்போது எங்கள் வீடுகளைப் பார்க்க முடியாதா?
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 முதல் 54 வயதுக்குட்பட்ட கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கெப் வண்டி என்பவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேகநபர்கள் கிளிநொச்சி மாவட்ட கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.