Monday, May 4, 2026

ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மூன்றாவது இடத்திற்குப் பின்தங்கியுள்ளார்.

by Amizhthu
Man in a white shirt raises a microphone while speaking outdoors, with a green, leafy background

செல்வப்பெருந்தகை, முதலில் புதிய தமிழகம் கட்சியிலும், பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இருந்தார். அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சிக்கு சென்றவர், எப்படியோ யாரோ பரிந்துரையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டார். கடைசியில், மாநில காங்கிரஸ் தலைவராகவும் ஆகி விட்டார். மாநகராட்சியின் கழிவு நீர் அகற்றும் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, செல்வப் பெருந்தகை மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அதை அவர் மறுத்த நிலையில், குற்றம் சுமத்திய யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடை, மலக்கழிவுகளை ஊற்றிய சம்பவம் நடந்தது.தேர்தலில் போட்டியிட சீட் வினியோகம் செய்வதில் அவர் முறைகேடு செய்வதாக, காங்கிரஸ் எம்.பி.,க்களே குற்றம் சாட்டினர்.

இப்படி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருந்த செல்வப் பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார். தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்ற நிலையில், செல்வப்பெருந்தகை மூன்றாம் இடத்துக்கு பின் தங்கியுள்ளார்.

ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியர் பணியில் இருந்தவர் செல்வம். அந்த பணியில் இருந்து விலகி, பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியில் அரசியலை தொடங்கினார். புதிய தமிழகம் கட்சியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் சிறிது காலம் இருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் சார்பில் மங்களூர் தொகுதி எம்.எல்.ஏ., ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தவர், அதன் மாநில தலைவராகவும் பதவி வகித்தார். இடைப்பட்ட காலத்தில் தன் பெயரை செல்வப் பெருந்தகை என மாற்றிக்கொண்டார்.

2010ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர், 2024ல் அதன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்தபின், மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00