பஞ்சாப் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, நாடு முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என, மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் உட்பட இரண்டு இடங்களில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கான சதிச் செயல்களின் பின்னணியில், பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., இருப்பது தெரியவந்துள்ளது.
இக்குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின், நாடு முழுதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்காத நிலையில், கல்பாக்கம் அனல் மின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, மத்திய உளவுத் துறையும் எச்சரிக்கை செய்துள்ளது.
- காசா இனப்படுகொலை தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக துருக்கி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
- எகிப்தில் நாளை காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
- சென்னையில் பீஹார் தம்பதியர் தொடர்பான கொடூரக் கொலை: 4 நாட்கள் காணாமல் போன பெண்ணின் உடல் மீட்பு
- புதிய கல்வி சீர்திருத்தத்தில் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கு சம வாய்ப்புகள் வரவேற்கத்தக்கது – ஸ்ரீநேசன்
- பலோசிஸ்தானில் ஒரே நாளில் பல்வேறு துப்பாக்கி–குண்டு தாக்குதல்கள்: பாகிஸ்தான் அதிர்ச்சி நிலையில்
- Using the name “Karumpuli Miller” for a commercial film is an act of deep disrespect to Tamil martyrdom and history
இது தொடர்பாக, கவர்னர் மற்றும் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதையடுத்து, மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கள் வாயிலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன; வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.