பஞ்சாப் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, நாடு முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என, மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் உட்பட இரண்டு இடங்களில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கான சதிச் செயல்களின் பின்னணியில், பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., இருப்பது தெரியவந்துள்ளது.
இக்குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின், நாடு முழுதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்காத நிலையில், கல்பாக்கம் அனல் மின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, மத்திய உளவுத் துறையும் எச்சரிக்கை செய்துள்ளது.
- கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 33’ம் ஆண்டு நினைவேந்தல் – பிராஞ்சு
- பஹ்ரைனில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கின்றன
- ரஷ்யா மூலம் ஏமாற்றப்பட்ட ஆட்சேர்ப்பில் சிக்கிய 15 ஜிம்பாப்வே குடிமக்கள் உக்ரைன் போரில் உயிரிழந்ததாக அரசு உறுதி
- தமிழீழமே என்ற கொள்கையில் வழுவாது நின்ற “மாமனிதர் தேனிசை செல்லப்பா” | த.ஒ.கு – பிரான்சு.
- இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சா
- The Flame of Sacrifice – Thileepan
இது தொடர்பாக, கவர்னர் மற்றும் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதையடுத்து, மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கள் வாயிலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன; வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.