76
எரிபொருள் விலை உயர்வு காரணமாக 6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என யார் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எரிபொருள் விலை, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, 6 சர்வதேச விமான சேவைகள் ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அதன் பட்டியல் பின்வருமாறு:
- 1.சென்னை – சிங்கப்பூர்,
- 2. மும்பை – நியூயார்க்,
- 3. மும்பை – டாக்கா,
- 4. டில்லி – சிகாகோ,
- 5. டில்லி – ஷாங்காய்,
- 6. டில்லி – மாலே
வரும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 6ம் தேதி வரை சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டாலும் 1200 சர்வதேச விமான சேவைகள் தொடரும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
You Might Be Interested In
- ஈரானின் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் ஜியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
- ‘6G’ எனப்படும் ஆறாவது தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
- சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
- சென்னையிலிருந்து பெங்களூருக்கு அதிவேக ரயிலின் பயண நேரம் வெறும் 73 நிமிடங்கள் மட்டுமே. – ரயில்வேத்துறை அமைச்சர்
- இந்தியாவின் நிலப்பரப்பில் 61 சதவீதம் நிலநடுக்க அபாயத்தில்.
You Might Be Interested In