பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்து உள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள சுவிஸ் தேசிய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடத்திய மாநாட்டில் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியதாவது:மேற்கு ஆசிய நெருக்கடி நீடித்தால், இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மேலும் மோசமடைந்தால், சில்லறை எரிபொருள் விலைகளை காலவரையின்றி மாற்றாமல் வைத்திருக்க அரசால் முடியாமல் போகலாம். மோதல் தொடர்வதால், கலால் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுசெய்து வருகின்றனர். இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.
அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாப்பதற்காக, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
- பாஜக அடுத்த அரசியல் எல்லையாக தமிழ்நாட்டை நோக்குகிறது என்கிறார் நாகேந்திரன்
- திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத சிற்றூண்டிச் சாலை அகற்றும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு
- நான்சி குத்ரி வழக்கில் சந்தேக நபரின் விவரத்தை FBI வெளியிட்டது; தகவல் வழங்கும் நபருக்கான பரிசுத்தொகை $100,000 ஆக உயர்வு
- தவெக வின் சாக்கடை அரசியல்!
- கள்ளக்குறிச்சிக்கு செல்லும் வழி தெரியாத ஒருவர் காசாவைப் பற்றி ஏன் கவலைப்படுகிறார் ? – அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்புகிறார்.
- இலங்கையின் மனித புதைகுழிகள் அகழ்வாராய்ச்சிகள் சர்வதேச தரங்களுக்கு இணங்க வேண்டும். உறுப்பு நாடுகள் கவுன்சிலில் வலியுறுத்துகின்றன.