யாழ்ப்பாணம் வலி-வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, நேற்றுடன் (15-06-2026) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி நேற்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள்குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
- ஈரான் தாக்குதலால் விமானங்கள் ரத்து – UAE அரசு சிக்கிய பயணிகளுக்கான ஹோட்டல், உணவு செலவுகளை முழுமையாக ஏற்கிறது
- பிரான்ஸ்’க்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது ஈருருளிப்பயணம்!
- அகவை வாழ்த்து – டிசம்பர் 30
- 12 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்தியக் கிரகப் போராட்டம்.
- சிறுத்தைகளை சிதைத்த சீமான் தம்பி கரிகாலன்!
- வட்டவன் கூட்டுப் படுகொலையின் “41வது ஆண்டு நினைவு நாள்” உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி, தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.









