யாழ்ப்பாணம் வலி-வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, நேற்றுடன் (15-06-2026) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி நேற்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள்குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “ஏழாம் நாள் 21.09.1987” தியாக வேள்வி.!
- நினைவு வணக்கம் – நவம்பர் 30
- நாடு தழுவிய விவசாயிகள் பேரணி அறிவிப்பு: கன்யாகுமரி–காஷ்மீர் பயணம் தொடங்குகிறது
- தியாகி திருமலை நடராஜன் (04.02.1957)
- நாம் தமிழர் உறவுகள் இதை செய்யாதீர்கள்!
- பிரஜா சக்தி திட்டம் ஆபத்தானது, தமிழ் தேசிய அரசியலை அதன் வேர்களிலேயே அழிக்கக்கூடும் – அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்
இந்நிலையில் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி, தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.









