திருமாவளவனின் ‘சதித் திட்டம்’ இதுதான்!
திருமாவளவனின் ‘சதித் திட்டம்’ இதுதான்!
திருமாவளவனின் ‘சதித் திட்டம்’ இதுதான்!
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை மோகன்
யாக்கோப் தற்குரூஸ் அலெக்சாண்டர்
தோட்டவெளி, தாராபுரம்
மன்னார்
வீரச்சாவு: 02.04.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை திருமால்
வெள்ளைக்குட்டி துரையன்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 11.03.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை பிறேமன்
சோமசுந்தரம் இளங்கோ
சங்கத்தானை, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் சுருளி
முருகன் சிவராசா
காட்டுப்புலம், அளவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.12.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை தயாளன்
கணபதிப்பிள்ளை கோபாலரத்தினம்
துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அழகன் (அன்பழகன்)
முருகேசு ரவீந்திரன்
தம்பகாமம், இத்தாவில், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை விபுலன் (விமலன்)
பிரான்சிஸ் சேவியர்கலிஸ்ரர் ஜோண்சன்
8ம் வட்டாரம், நெடுந்தீவு மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை வாமதேவன்
இராசலிங்கம் ஜெயசங்கர்
தட்சணாமருதமடு, மடுக்கோவில
மன்னார்
வீரச்சாவு: 02.02.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அகிலன்
வேலுப்பிள்ளை கந்தசாமி
கோயில்புளியங்குளம், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 25.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் குபேரன்
இராமச்சந்திரன் தர்மராசா
விநாயகபுரம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் செந்தில்
செல்லத்துரை ஈஸ்வரன்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கரிகாலன்
ஆறுமுகம் சாந்தகுமார்
1ம் படிவம், சேமமடு,
வவுனியா
வீரச்சாவு: 16.11.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் முத்தழகு (டியூட்டோன்)
காசிப்பிள்ளை சசிக்குமார்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.12.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் உதயகுமார் (கிச்சான்)
சீமான்பிள்ளை கிறிஸ்ரி
வேப்பங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 29.09.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் அதர்மலிங்கம் (காந்தன்)
சின்னத்துரை கேதாரலிங்கம்
வம்மிவெட்டுவான், கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் துஸான்
தேவராசா பாக்கியராஜா
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 12.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி)
செல்லத்துரை நாகேந்திரன்
பாணமைப்பற்று, கோமாரி
அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் பிரதீபராஜன்
பொன்னம்பலம் சிவராசா
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை செந்தமிழ்ச்செல்வன்
டானியல் யூட்பிறிச் ஜெரால்ட்
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் செல்வக்குமார்
முருகையா விஜயராஜ்
கௌதாரிமுனை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை நிசாந்தி
நடராசா நேசநாயகி (குட்டி)
தேவபுரம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் மதன்
நாகராசா குகதாசன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 25.10.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் அமிர்தகலா
யேசுராசா லூட்சின் ஜெயந்தா
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அல்லி
துரைச்சாமி சசிகலா
கணேசபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.05.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் இலக்கியன் (லக்கி)
சின்னத்துரை கேதீஸ்வரன்
நாவற்குழி கிழக்கு, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் வைதேகி
பொன்னழகன் இராசலட்சுமி
பொன்னகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.08.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை முல்லைமாறன்
அருமைத்துரை ஜெயக்காந்தன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 02.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் மலர்ச்செல்வன் (விஜே)
கந்தசாமி விஜிதரன்
வீரமுனை, சம்மாந்துறை
அம்பாறை
வீரச்சாவு: 01.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் அன்புக்குமரன் (கார்முகிலன்)
கனகரட்ணம் திலகேஸ்வரன்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.04.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் அன்புவாணன் (கருணாகரன்)
கந்தையா உதயகுமார்
தம்பலவத்தை, ஊத்துகேணி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.04.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சோழன்
இரத்தினம் யூட்லிசயல்வன்
கோப்பாய் மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் ஜமுனராஜன்
பரமானந்தம் சந்திரகுமார்
மாங்கேணி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் சதுர்க்கன்
விநாயகமூர்த்தி யுவராசா
6ம் வட்டாரம், துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் விஜயகுமார்
பந்துலசேன ஜெயசேகரன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 20.12.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் தூயமகள் (தூயவள்)
திருநாவுக்கரசு விஜயரஞ்சினி
சிவன் வீதி, மாயவனூர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் றகீம்
சின்னத்துரை மணிவண்ணன்
நவாலி வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கிறிஸ்ரி
போல் கிறிஸ்ரி
நவாலி தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் இசைவிழி
குமாரசாமி விமலினி
ஞானிமடம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.04.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் பாண்டிமுத்து
பாலசுந்தரம் பிரதீபன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.08.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மாவீரர் கலைச்செல்வன் (பயஸ்)
இஸ்ரவேல் வீனஸ்குமார்
மன்னார்
வீரச்சாவு: 17.05.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்.கேணல் கிருபாசினி
மகேசன் ரேணுகாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் கோநிலவன்
அரசரத்தினம் பகீரதன்
மசார், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் அருந்தவன்
தவராசா யசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் அன்புச்செல்வன்
தங்கவேல் சந்திரகுமார்
வட்டுவாகல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் அவைமாறன்
விஜயகுமார் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் அருமைச்சேரன்
ரகுநாதன் கௌசிகன்
1ம் பகுதி, அனிஞ்சயன்குளம், யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் ஆரணி
சிவராஜா ராதிகா
154ம் கட்டை, அறிவியல்நகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
தேவன்
தேவராசா தேவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
சாந்தன் (சங்கர்)
இராசையா சாந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
தலைமைக் காவலர் ஜீவதாசன்
செல்வத்துரை ஜீவதாசன்
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
தலைமைக் காவலர் மயூரன்
கிருஸ்ணானந்தன் மயூரன்
வவுனியா
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை நீலவண்ணன்
தேவராசா ஜெயதீபன்
2ம் கண்டம், முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கனிமகள்
குணசீலன் டெனிஸ்ரெலா
மன்னார்
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
ஆய்வாளர் சுதர்சன்
குமாரலிங்கம் சுதர்சன்
நவ்வி, பாலமோட்டை
வவுனியா
வீரச்சாவு: 12.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் நித்திலன்
சூசைப்பிள்ளை யோசப் ராஜேந்திரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் தமிழ்மாறன்
பரமநாதன் சிறிரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் தேனிலா
சிதம்பரநாதன் கிரிதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சமர்த்தேவன்
பாஸ்கரன் அகிலன்
திருகோணமலை
வீரச்சாவு: 12.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் கடல்வேங்கை (உதயன்)
பொன்னையா யோகராசா
அபிசாவளை, கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 12.02.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் யாழ்தேவி
இராசேந்திரம் நவராஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.02.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் பாவலன்
சந்திரன் நளினிக்காந்
மாமாங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2002
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் தமிழரசன்
கந்தலிங்கம் மோகனேஸ்வரன்
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 12.02.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை மஞ்சு
கந்தவன் உதயகுமாரி
அம்பிலாந்துறை, கொக்கொட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் நகுலேந்திரன் (அசோக்)
தங்கராசா ஜெயக்குமார்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் இளந்திரை
வைரமுத்து ரவிச்சந்திரன்
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை தணிகைச்சுடர்
நடராசா ராஜ்மோகன்
மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் சோழநிலவன்
முத்தையா கிருபாகரன்
கிருஸ்ணபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.02.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை முகிலகரன்
மாணிக்கராசா தவராசா
தாழங்குடா, ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் தவசுதா
பொன்னுத்துரை மேகலாதேவி
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் ஜெயராஜ்
தர்மரட்ணம் தயாரஞ்சன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.02.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் நந்தகோபால் (பற்றிக்)
ஏகாம்பரம் அமிர்தன்
உப்பாறு, ஆலங்கேணி
திருகோணமலை
வீரச்சாவு: 12.02.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் சுரேஸ்
அன்ரனிராசா அன்ரனிலோறன்ஸ்
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கமல்ராஜ்
சமயன் சந்திரசேகரம்
தீர்த்தக்கரை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.02.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
சிவா
தம்பிப்பிள்ளை சிவா
வீரச்சாவு: 12.02.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது இந்நாட்டின் மிகப்பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளது. அந்த வகையில் நாளாந்தம் நாடளாவிய ரீதியில் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தைத் தழுவுகின்றனர். நோயாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவு வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் மத்திய நிலையத்தை திங்கட்கிழமை (09) பிரதியமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்போது இந்நாட்டில் புற்றுநோய் ஒரு பிரதான சுகாதாரப் நெறுக்கடியாக உருவெடுத்துள்ளது. சிகிச்சைகளுக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக நாட்டிள் உள்ள பெரும்பாலான நோயாளர்கள் புற்றுநோயின் இறுதி நிலைகளிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் அவர்களுக்குப் பலதரப்பட்ட சிகிச்சை முறைகளை வழங்க வேண்டியுள்ளது. அத்தோடு நாட்டில் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமடைந்து வருகிறது.
நாடளாவிய ரீதியில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தை தழுவுகின்றனர். அந்தவகையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் மத்திய நிலையங்களை நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய 6 பிரதான வைத்தியசாலைகளில் இத்தகைய நிலையங்கள் இயங்கி வருகின்றன. புதிதாகத் திறக்கப்பட்ட இந்த மத்திய நிலையத்தில் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பொதுமக்கள் இங்கு பரிசோதனைகளைச் செய்துகொள்ள முடியும்.
ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதால், பொதுமக்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளான உணவுப் பாதுகாப்பு, சூழல் காரணிகள் மற்றும் விவசாய இரசாயனப் பயன்பாடு குறித்து அமைச்சு மட்டத்திலான விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது.
வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு மெல்லுதல் காரணமாக நாளாந்தம் 10 வாய்ப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் மூவர் உயிரிழக்கின்றனர். அதேபோல், பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் என்பன அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க முறையான விழிப்புணர்வும், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளும் அவசியம் என்றார்.

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை வாசன்
ஐயம்பிள்ளை மணிவாசகம்
நெடுந்தீவு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1984
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை நிதி
இராசலிங்கம் சிவமனோகரி
இடைக்காடு, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.12.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சயந்திரன்
அடைக்கலம் சிவகுமார்
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 29.05.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் வெற்றிவேல் (நீயா)
சித்திரவேல் இராமச்சந்திரன்
கல்குடா, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.09.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கலைச்செல்வன்
சிவப்பிரகாசம் சுரேஸ்குமார்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 12.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்.கேணல் குட்டிமணி
நடராசா ஜெயசீலன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் பேரின்பன் (வசந்தன்)
நாகமுத்து ஜெகராஜா (ஜெயராசா)
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் வதனி
ஜெகநாதன் சசிகலா
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 18.07.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை காங்கேயன்
மயில்வாகனம் நாகநாதன்
வவுனிக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.07.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் மறவன்
சின்னத்தம்பி காண்டீபன்
மறவன்புலவு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.03.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை பிரதீபன்
திரவியநாதன் கஜேந்திரன்
மாவிட்டபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.06.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் பவளயோதி
கிருஸ்ணபிள்ளை தினேஸ்கரன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.08.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை மகேந்தினி
செல்லத்துரை வசந்தி
2ம் படிவம், கொல்லவிளாங்குளம், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை இசையமுது (அருள்மலர்)
நடராஜா நாகதேவி
கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை சியாமளா
இராமச்சந்திரன் சுமணலதா
ஒதியமலை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 04.12.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கூத்தரசன் (நிலவன்)
கவிரியன் குணசேகரன்
வஞ்சியன்குளம், நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 02.04.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கண்ணன் (வண்ணத்தமிழன்)
மாரிமுத்து கரிகாலன்
எள்ளுக்காடு, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்.கேணல் புரட்சிநிலவன்
வைரமுத்து வசீகரன்
ஆழியவளை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.2006
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்.கேணல் தியாகராஜன்
விஜயரத்தினம் சிவகரன்
மட்டுவில்நாடு கிழக்கு, புநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.02.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் கயல்வீரன்
இராசு சிவகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.11.2007
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன் செஞ்சுடர் (வைஸ்ணவி) (தீபனா)
சின்னையா மாலதி
செல்வபுரம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை அன்பு (தீபன்)
பேரானந்தசிவம் ரதீபன்
ஞானிமடம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கண்ணதாசன்
தங்கையா கண்ணதாசன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 11.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை முத்துவேந்தன்
ஆறுமுகம் குயிலேசன்
சதாபுரம், இத்தாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் மான்விழி (இனியசுரபி)
செல்வராசா செல்வராணி
2ம் பகுதி, அனிஞ்சியன்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.02.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் சின்னா
வேலும்மயிலும் கரிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் இளங்கோ
நமசிவாயம் சஜீவன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் இயலரசன்
செல்வரட்ணம் சாந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை தமிழ்த்துணைவன்
கிருஸ்ணபிள்ளை இராமச்சந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் நிலவரசன்
விஜயபாலன் கஜேந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
தலைமைக் காவலர் கணேசலிங்கம்
வல்லிபுரம் கணேசலிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.02.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை இனியவன்
இராஜஸ்ரீ வவிச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்.கேணல் புரட்சிநிலவன்
வைரமுத்து வசீகரன்
ஆழியவளை, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.2006
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
மேஜர் அன்பன் (அன்பு)
சந்திரலிங்கம் அசோக்குமார்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் இலக்கியன்
அருட்சுணன் குகானந்தம்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் சீத்தா
சிவகுரு சறோஜா
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கலைவாணி
அரசையா விக்கினேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை இசைநிலா
பொன்னையா செண்பகவல்லி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 11.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
லெப்டினன்ட் குணதீசன் (குணதாஸ்)
வீரசிங்கம் திருத்தணி
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை ஈழவன்
காளியப்பு சிவராசா
9ம் வட்டராம், பாட்டாளிபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.02.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை கலா
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 11.02.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் அசோக்
முத்துலிங்கம் மரியதாஸ்
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வெள்ளையன்
வெள்ளையன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை வெள்ளை (குரு)
எமிலியான் மென்டிஸ் நெல்சன் றெஜினோல்ட்
செம்பியன்பற்று வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை லிங்கம் (அம்முனி)
பரமசாமி அமுதலிங்கம்
கந்தரோடை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை வாணன்
பன்குடாவெளி, இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
வீரவேங்கை பாலன்
இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
✦. அரிதான பகிரங்க விரிசல்: போர் காலக்கெடுவில் வாஷிங்டன் vs கீவ்

உக்ரைனுக்கும் அதன் மிக முக்கியமான ஆதரவாளரான அமெரிக்காவிற்கும் இடையிலான பொதுவான அரசியல் தகவல் பரிமாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விரிசல் வெளிப்பட்டுள்ளது. அமெரிக்க உள்நாட்டு அரசியல் சூழல் மற்றும் தேர்தல் கணக்கீடுகளை கருத்தில் கொண்டு, போரை முடிவுக்குக் கொண்டுவர வாஷிங்டன் ஜூன் மாதத்தை ஒரு ரகசிய காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளதாக அதிபர் வலோதிமிர் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூற்றை அமெரிக்காவின் நேட்டோ (NATO) தூதர் மேத்யூ விட்டேக்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:
• இந்த காலக்கெடு ஜெலென்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட ஒன்றே.
• அமெரிக்கா போரை “முடிந்தவரை விரைவில்” முடிக்க விரும்புகிறது.
• ஆனால் தீவிரமான போர்ச் சூழலில் இத்தகைய செயற்கையான காலக்கெடுகளை நிர்ணயிப்பது மிகவும் ஆபத்தானது.
இந்தப் பகிரங்க முரண்பாடு அரிதானது மட்டுமல்ல; பல அரசியல் உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது. இது வெறும் தேதிகள் குறித்த கருத்து வேறுபாடு அல்ல. போர் நான்காவது ஆண்டிற்குள் நுழையும் தருணத்தில், உத்திகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அரசியல் எதார்த்தங்களில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தின் வெளிப்பாடாகவும் இது விளங்குகிறது.
✦. பெயரளவில் அமைதிப் பேச்சுவார்த்தை – எதார்த்தத்தில் முட்டுக்கட்டை
அபுதாபியில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைகள் உட்பட, அமெரிக்க தலைமையிலான ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தாலும், அவற்றின் நடைமுறை விளைவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன:
• குறைந்த அளவிலான கைதிகள் பரிமாற்றம் மட்டுமே சாத்தியமானது.
• போர் நிறுத்த விதிமுறைகளில் எந்தவொரு கணிசமான முன்னேற்றமும் இல்லை.
• நிலப்பரப்பு எல்லைகள் அல்லது பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த உடன்பாடுகள் எட்டப்படவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தைகள், மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மோதலைக் கையாளும் முயற்சிகளாக (Conflict Management) மட்டுமே திகழ்கின்றன. போர்க்களச் சூழல் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், ராஜதந்திரம் தீர்க்கமானதாக இல்லாமல், வெறும் எதிர்வினைச் செயல்பாடாகவே செயல்படுகிறது.
இது கீவ் அரசிற்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது:
➽ மேற்கத்திய ஆதரவு என்பது, உக்ரைன் எவ்வளவு அளவு விட்டுக்கொடுப்புகளைச் செய்யத் தயாராக உள்ளது என்பதையே அடிப்படையாகக் கொண்டதாக மாறுகிறதா?
✦. ரஷ்யாவின் கதைக்கள மாற்றம்: “பயங்கரவாதப் போர்” மற்றும் கலப்பு மோதல்
ராஜதந்திர முயற்சிகள் முடங்கியுள்ள சூழலில், மாஸ்கோ தனது தகவல் மற்றும் சட்டப் போரைக் கணிசமாகத் தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் மீது பின்வரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்:
• வழக்கமான போர்முறைகளைக் கைவிட்டதாக
• ரஷ்யாவிற்குள் “பயங்கரவாத பாணி தாக்குதல்களை” நடத்துவதாக
• பொதுமக்கள், உள்கட்டமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இலக்காக்குவதாக
• மூத்த அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களைப் படுகொலை செய்ய முயற்சிப்பதாக
ரஷ்யா இந்தச் செயல்களை மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடத்தப்படும் ஒரு ‘கலப்புப் போர்’ (Hybrid War) என வரையறுக்கிறது. இதன் பிரதான நோக்கங்கள்:
• ரஷ்ய சமுதாயத்தை உள்ளார்ந்த முறையில் சீர்குலைப்பது
• போர்க்களத்தில் உக்ரைனுக்குத் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை ஈடுகட்டுவது
• நேட்டோ நேரடியாகப் போரில் ஈடுபடாமல், மாஸ்கோவிற்கு ஒரு “மூலோபாயத் தோல்வியை” ஏற்படுத்துவது
இந்தக் கதைக்கள வடிவமைப்பு மிக முக்கியமானது. இது ரஷ்யாவின் எதிர்கால இராணுவ, சட்ட மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நியாயமான அடித்தளத்தை உருவாக்குகிறது.
✦. ராஜதந்திரமா அல்லது அரசியல் நாடகமா? – புதின் சந்திப்பு சர்ச்சை
அதிபர் விளாடிமிர் புதினுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை மாஸ்கோ உடனடியாக நிராகரித்துள்ளது. ரஷ்யாவின் ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இதை பின்வருமாறு விமர்சித்துள்ளார்:
• இது உள்நாட்டு அரசியல் நோக்கத்திற்கான தந்திரம்
• போர்க்களத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளை மறைக்கும் முயற்சி
• தீவிரத்தன்மையும் நடைமுறை அடிப்படையும் இல்லாத அரசியல் நாடகம்
பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா கொள்கை ரீதியாக எதிரானதல்ல. ஆனால் அவை:
• முடிவுகளைத் தரக்கூடியதாக (Result-oriented) இருக்க வேண்டும்
• களத்தில் உருவாகியுள்ள “புதிய எதார்த்தங்களின்” அடிப்படையில் அமைய வேண்டும்
• வெறும் அடையாளச் சடங்காக மாறக்கூடாது
இந்தப் பரஸ்பர அவநம்பிக்கை, ராஜதந்திரத்திற்கான வாய்ப்புகளை மேலும் சுருக்குகிறது.
✦. லாவ்ரோவின் குற்றச்சாட்டு: அமெரிக்காவின் “இரட்டை வேடம்”
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், வாஷிங்டன் ஒரு முறையான “இரட்டை விளையாட்டில்” ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, மோதலை உக்ரைன் எல்லைகளைத் தாண்டி விரிவுபடுத்தியுள்ளார்.
முக்கிய குற்றச்சாட்டுகள்:
• அமைதிப் பேச்சுகளைப் பேசிக்கொண்டே பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்துதல்
• பைடன் காலத்து அவசரகாலச் சட்டங்களை தொடர்ச்சியாக நீட்டித்தல்
• லுகோயில் (Lukoil), ரோஸ்நெஃப்ட் (Rosneft) போன்ற எரிசக்தி நிறுவனங்கள்மீது புதிய தடைகள்
• பிரிக்ஸ் (BRICS) மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு எதிராக அமெரிக்க டாலரை ஆயுதமாக்குதல்
• ஐரோப்பாவை விலையுயர்ந்த அமெரிக்க LNG மீது சார்ந்திருக்க வற்புறுத்துதல்
லாவ்ரோவ் இதனை “நிதிசார் அணுப்போர்” (Financial Nuclear War) என வர்ணிக்கிறார். இதன் விளைவாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள்:
• மாற்று வர்த்தக அமைப்புகளை உருவாக்குதல்
• மேற்கத்திய நிதி அமைப்புகளின் மீதான சார்பை குறைத்தல்
• ‘டாலர் நீக்கம்’ (De-dollarization) செயல்முறைகளை வேகப்படுத்துதல்
போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் கூறுகிறார். அவரது பார்வையில், உக்ரைன் என்பது ஒரு போர்க்களமாக மட்டுமல்ல; பரந்த பொருளாதாரப் போருக்கான சாக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
✦. பிரிட்டன் ஒரு நேரடிப் பங்கேற்பாளரா?
பிரிட்டன் வெறும் ஆதரவாளராக இல்லாமல், நேரடியாகவே போரில் ஈடுபடுவதாக ரஷ்யா தனது குற்றச்சாட்டுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது:
• பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் கீவ்வில் செயல்படுவதாக
• உக்ரைனின் இராணுவத் திட்டமிடலுக்கு நேரடி உதவி
• பிரிட்டன் வீரர்கள் களத்தில் இருப்பதாக
• ‘இன்டர்ஃபெலெக்ஸ்’ (Interflex) பயிற்சித் திட்டம் 2026 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது
பிரிட்டன் இதை மறுத்தாலும், ஒரு பிரிட்டிஷ் வீரர் உக்ரைனில் உயிரிழந்ததை (விபத்து என) உறுதிப்படுத்தியுள்ளது. மாஸ்கோவின் பார்வையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விட நோக்கமே முக்கியமானது. ரஷ்யா பிரிட்டனை முறையாக ஒரு போரிடும் நாடாகக் கருதத் தொடங்கினால், நேட்டோ–ரஷ்யா நேரடி மோதல் அபாயம் பெருமளவில் அதிகரிக்கும்.
✦. போக்ரோவ்ஸ்க்: போரின் போக்கை மாற்றக்கூடிய போர்க்களம்
கிழக்கு உக்ரைனில் போர் ஒரு தீர்மானகரமான கட்டத்தை எட்டியுள்ளது.
போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) ஏன் முக்கியமானது?
• முக்கியமான ரயில்வே மற்றும் விநியோக மையம் (Logistics Hub)
• உக்ரைன் கட்டுப்பாட்டிலுள்ள டோனெட்ஸ்க் பகுதிகளுக்கான நுழைவாயில்
• இது வீழ்ந்தால், அவ்திவ்காவிற்குப் பிறகு ரஷ்யாவின் மிகப்பெரிய வெற்றியாகும்
ரஷ்யப் படைகள் உக்ரைனின் வான் பாதுகாப்பு இடைவெளிகள், வழிகாட்டப்பட்ட குண்டுகள் மற்றும் மனிதவள மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி முன்னேறுகின்றன. போக்ரோவ்ஸ்க் வீழ்ந்தாலும், ஸ்லோவியன்ஸ்க் மற்றும் கிராமடோர்ஸ்க் நகரங்களை கைப்பற்ற பல ஆண்டுகளும் பெரும் இழப்புகளும் தேவைப்படும் என உக்ரைன் எச்சரிக்கிறது. இருப்பினும், நிலப்பரப்பை விட்டுக்கொடுப்பதற்கு உக்ரைன் மக்கள் இன்னும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
✦. பொருளாதாரத் தடைகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம்: 20-வது தொகுப்பு
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வளர்ந்து வரும் சந்தேகங்களை எதிர்கொள்கின்றனர்:
• ரஷ்ய ஆயுதங்களில் மேற்கத்திய கூறுகள் தொடர்ந்தும் காணப்படுவது
• எண்ணெய் தடைகளை மீறி செயல்படும் ‘நிழல் கப்பற்படைகள்’
• கிரேக்கத்திற்கு சொந்தமான கப்பல்களின் பங்கு
இருந்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றியம் பின்வருமாறு வலியுறுத்துகிறது:
• 2025-ல் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் 24% குறைந்துள்ளது
• வட்டி விகிதங்கள் 16% எட்டியுள்ளன
• புதிய கடல்சார் சேவைத் தடைகள் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும்
இப்போது கேள்வி, தடைகள் ரஷ்யாவை பாதிக்கின்றனவா என்பது அல்ல;
➽ அவை ரஷ்யாவின் மூலோபாய முடிவுகளை மாற்றுமா என்பதே.
✦. வரலாற்றின் எச்சரிக்கை: ஐரோப்பாவிற்கு ஜாகரோவாவின் செய்தி
பிரெஞ்சு இராணுவ அதிகாரிகள் “மாஸ்கோவிற்கான போர்” என்ற ஒத்திகையை நடத்தியதாக வந்த தகவல்களுக்கு பதிலளித்த மரியா ஜாகரோவா, வரலாற்றை நினைவூட்டினார்:
• நெப்போலியன் – 1812
• ஹிட்லர் – 1941–42
• போல்டாவா – 1709
அவரது செய்தி தெளிவானது:
ஐரோப்பா “வரலாற்று மறதி” (Historical Dementia) நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. காலம், ஆழம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக ரஷ்யா நம்புவதை இது வெளிப்படுத்துகிறது.
✦. முடிவுரை: ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் போர்
உக்ரைன் போர் இப்போது வெறும் டாங்கிகள் மற்றும் பதுங்குக் குழிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அது:
• நட்பு நாடுகளுக்கிடையிலான தகவல் மற்றும் கருத்துப் போர்
• பொருளாதாரம் மற்றும் ஊடக தளங்களில் ஒரு கலப்பு மோதல்
• நேட்டோ ஒற்றுமைக்கான ஒரு கடும் சோதனை
• உலகளாவிய தெற்கு நாடுகளின் எதிர்கால நிலைப்பாட்டை நிர்ணயிக்கும் ஒரு முக்கியப் புள்ளி
காலக்கெடுகள் மறுக்கப்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கி, போர்க்களக் கோடுகள் வலுவடைந்துள்ள நிலையில், ஒரு உண்மை மட்டும் தெளிவாகிறது:
➽ விட்டுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன;
அதே நேரத்தில் போரின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

எழுதியவர்
ஈழத்து நிலவன்
தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்
10/02/2026
மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், நுாற்றுக்கணக்கான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பொது இடங்களில் கூடவும், போராட்டம் நடத்தவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பழங்குடியினரான கூகி – மெய்டி சமூகத்தினர் இடையே, 2023ல் மோதல் வெடித்தது. தலைநகர் இம்பால் உட்பட மாநிலம் முழுதும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. ஆயிரக்கணக்கான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர். இதில், 260க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்கு பொறுப்பேற்று, பா.ஜ.,வைச் சேர்ந்த பைரேன் சிங், கடந்தாண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
எதிர்ப்பு இதையடுத்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால், மாநிலத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது.
ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங் சமீபத்தில் பதவியேற்றார்.
கூகி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ., – எம்.எல்.ஏ., நெப்சா கிப்ஜென், நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., டிக்ஹோ ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
மெய்டி சமூகத்தின் தலைமையிலான அமைச்சரவையில், கூகி இனத்தைச் சேர்ந்த நெப்சா கிப்ஜென் இணைந்ததற்கு, கூகி இனத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவரை ‘துரோகி’ என விமர்சித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டிய அவர்கள், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், உக்ருல் மாவட்டத்தில், இரு சமூகத்தினர் இடையே நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது.
இங்குள்ள லித்தான் கிராமத்தில் தங்குல் சமூகத்தைச் சேர்ந்த நபரை, எட்டு பேர் அடங்கிய கும்பல், கடந்த 7ம் தேதி இரவு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தங்குல் மற்றும் கூகி சமூகத்தினர் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
கூகி இனத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய குழுவி னர், லித்தான் கிராமத்தில் இருந்த வீடுகளுக்கு தீ வைத்தனர். அங்கிருந்தவர் கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
தடை இந்த மோதல், லித்தான் கிராமம் முழுதும் எதிரொலித்தது. சம்பவ இடத்துக்கு வந்த பாதுகாப்பு படையினர், மோதலில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைத்தனர். இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் வந்தது.
சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும், சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டத்தை தடுக்கவும் மஹாதேவ், லம்பூய், ஷாங்காய் மற்றும் லித்தானுக்கு செல்லும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர் போராட்டம் மற்றும் வன்முறையை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 7:00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை லித்தான் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர உக்ருல் மாவட்ட கலெக்டர் ஆசிஷ் தாஸ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொது இடங்களில் கூடவும், சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, இன்று திங்கட்கிழமை (09-02-2026) முற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கான அதிகாரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதோடு, அதற்குரிய விதிமுறைகளின் வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட வேண்டிய முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மறுசீரமைப்புச் செயல்முறையின் போது எழும் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுதல், பாடசாலை மாணவர் போக்குவரத்தில் நிலவும் சிக்கல்களைக் குறைத்து முறையான போக்குவரத்துப் பொறிமுறையொன்றை உருவாக்குதல் மற்றும் “சிசு செரிய” பாடசாலை போக்குவரத்து சேவையை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
பாடசாலை மாணவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகச் சட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்துதல், சிறுவர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து மாணவர் போக்குவரத்தின் போது பதிவாகும் துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுத்தல், பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தி அதனைப் பொறுப்புவாய்ந்த சேவையாக மாற்றுவது ஆகியன குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியன ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால உள்ளிட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
“ இந்த முறை பலமான கூட்டணி அமைந்துள்ளது.தி.மு.க.,வை தோற்கடித்தே தீர வேண்டும். பா.ஜ.,வில், ‘நான் தான் பெரியவன்’ என்று யாரும், இறுமாப்புடன் இருக்கக்கூடாது. ,” என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.,வில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை தி.நகர் கமலாலயத்தில், நடந்தது.

கூட்டத்தில், சந்தோஷ் பேசியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 50 – 60 நாட்கள் கூட கிடையாது. அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., உட்பட பல கட்சிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டில், பா.ஜ.,வுக்கு 20 சதவீத தொகுதிகள் கிடைக்கும்; அங்கு மட்டும் நாம் போட்டியிடுவதாக பா.ஜ.,வினர் கருதக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு, பா.ஜ.,வினர் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சிகள் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்பார்வையிட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பா.ஜ., பூத் கமிட்டி என்று கருதாமல், தேசிய ஜனநாயக கூட்டணி என்பதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். கூட்டணி கட்சியினருடன் அனுசரித்து செல்ல வேண்டும். இந்த முறை பலமான கூட்டணி அமைந்துள்ளது. எனவே, தி.மு.க.,வை தோற்கடித்தே தீர வேண்டும்.
பா.ஜ.,வில், ‘நான் தான் பெரியவன்’ என்று யாரும், இறுமாப்புடன் இருக்கக்கூடாது. சட்டசபை தேர்தலில், எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. கிடைக்கவில்லை என்றால், மற்றவர்கள் வெற்றிக்காக பாடுபட வேண்டும். உழைக்கும் எல்லாருக்கும், எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படும்.
தி.மு.க.,வின் ஊழல்களை வீடுதோறும் மக்களிடம் கொண்டு சென்று, அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். உட்கட்சி விவகாரம், கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க அடக்குமுறைகளைக் கையாளத் தயாராகி வருகிறது. எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே அவசர கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (09-02-2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் தபால் கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரித்து, குறைந்தபட்ச முத்திரைக் கட்டணத்தை 70 ரூபாவாக மாற்றியுள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் தபால் சேவையைப் பயன்படுத்துவோர் குறைந்துள்ள நிலையில், இந்த விலையேற்றம் பாரம்பரிய தபால் முறையை மேலும் முடக்கும் செயலாக அமையும்.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம், இன்று மிகவேகமாக விலைகளை உயர்த்தி வருகின்றது. 2027ஆம் ஆண்டு வரை சம்பள உயர்வு வழங்க முடியாது என ஜனாதிபதி கூறுவது, தேர்தல் மேடைகளில் அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
சுகாதாரம், கல்வி, மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளில் பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசாங்கத்தைக் கொண்டுவர உதவிய அதே தரப்பினர், இன்று அரசாங்கத்தின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து வீதிக்கு வரத் தொடங்கியுள்ளனர். நாட்டில் தற்போது அவசர காலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆனால் அரசாங்கம் அதைச் செய்துள்ளது.
வரவிருக்கும் மே, ஜூன் மாதங்களில் ஏற்படக்கூடிய மக்கள் போராட்டங்களையும், வேலைநிறுத்தங்களையும் அடக்குமுறை மூலம் ஒடுக்குவதற்காகவே அரசாங்கம் இந்த அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. நெல் விவசாயிகளுக்கான நியாயமான விலை வழங்கப்படாமை மற்றும் களஞ்சியசாலைகள் மூடப்பட்டிருப்பது போன்ற சிக்கல்கள் காரணமாக விவசாயிகளும் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.
அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டு, தற்போது அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிராக சகல துறைகளிலிருந்தும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தயாராகி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் இன்றிலிருந்தே தயாராகி வருகிறது என்றார்.
ஆழமான புவிசார் அரசியல் மோதலை வெளிப்படுத்தும் முறியடிக்கப்பட்ட ஒரு கொலை முயற்சி
✦. மாஸ்கோவில் நடந்ததாகக் கூறப்படும் கொலைச் சதி

ரஷ்யாவின் இராணுவ உளவுத் துறையான GRU-வின் முதல் துணைத் தலைவரும், உயர்மட்ட உளவுத் தளபதிகளில் ஒருவருமான லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் (Vladimir Alekseyev) அவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சியை முறியடித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மிகவும் நுணுக்கமான ராஜதந்திர சூழ்நிலையில், ரஷ்யாவின் இராணுவ–உளவுக் கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவரை அகற்றுவதற்காக இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டதாக ரஷ்ய ஃபெடரல் பாதுகாப்பு சேவை (FSB) தெரிவித்துள்ளது.
இந்தக் கொலை முயற்சியின் பிரதான சந்தேக நபராக, உக்ரைனில் பிறந்த ரஷ்ய குடிமகனான லியுபோமிர் கோர்பா (Lyubomir Korba) என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஆகஸ்ட் 2025-இல் பணியமர்த்தப்பட்டதாக ரஷ்ய விசாரணை அமைப்புகள் கூறுகின்றன.
அவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுபவை:
• மாதாந்திர ஊதியம்: $2,000
• பணி நிறைவேற்றப்பட்ட பின் வழங்கப்படவிருந்த இறுதித் தொகை: $30,000
• மாஸ்கோ நகருக்குள் ஆயுதப் பயிற்சி மற்றும் தளவாட ஆதரவு
இந்தத் தாக்குதல், ஒலி மறைக்கப்பட்ட (silenced) மாகரோவ் துப்பாக்கி மூலம் நடத்தப்பட்டதாகவும், குடியிருப்பு வளாகத்திற்குள் ஜெனரல் அலெக்ஸீவ் மீது பலமுறை சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் உயிர் பிழைத்தாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விவரங்களும் ரஷ்ய பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் சந்தேக நபர்களின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை சுயாதீனமாக இன்னும் சரிபார்க்கப்படவில்லை.
✦. வாக்குமூலங்கள், கூட்டாளிகள் மற்றும் தப்பிக்கும் பாதை
இந்த வழக்குடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட விசாரணைக் காட்சிகள் மற்றும் எழுத்துப்பூர்வ வாக்குமூலங்களை ரஷ்ய புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
● லியுபோமிர் கோர்பா
உக்ரைனிய சிறப்புப் புலனாய்வு அமைப்புகளால் தன்னை நேரடியாகப் பணியமர்த்தியதாகக் கூறும் இவர், நிலையான மாதாந்திர ஊதியம் மற்றும் பணிக்கான வெகுமதி தொகையைப் பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும்,
துருக்கி → துபாய் → ருமேனியா → கிவ் (Kyiv)
என்ற வழித்தடத்தின் மூலம் தப்பிக்கும் திட்டம் வகுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
● விக்டர் வாசின்
கோர்பாவுக்கு பாதுகாப்பான தங்குமிடம், பயண ஆவணங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனது செயல்பாடுகள் கருத்தியல் உந்துதலால் மேற்கொள்ளப்பட்டவை எனக் கூறியுள்ள அவர், கோர்பாவுடன் இணைந்து செயல்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், மூன்றாவது சந்தேக நபரான ஜெனைடா செரெப்ரியான்ஸ்காயா (Zenaida Serebryanskaya), இலக்கு வைக்கப்பட்ட அதிகாரி வசித்த அதே கட்டிடத்தில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தற்போது உக்ரைனுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
✦. போலந்து, நேட்டோ மற்றும் விரிவடையும் உளவுப் போர்
இந்த வழக்கில் மாஸ்கோ முன்வைக்கும் மிகப் பெரும் மற்றும் வெடிக்கும் தன்மையுடைய குற்றச்சாட்டு என்னவென்றால், நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் உளவுத்துறை, இந்தச் சதியில் தளவாட ரீதியான ஆதரவை வழங்கியுள்ளதாகும்.
இதன் மூலம், இந்தச் சம்பவம் ரஷ்யா–உக்ரைன் இடையிலான ஒரு இருதரப்பு விவகாரமாக மட்டுமல்லாது, நேட்டோவுடன் தொடர்புடைய ஒரு பரந்த உளவுத்துறை மோதலாக மாறிவிடுகிறது என்று ரஷ்யா வாதிடுகிறது.
போலந்தும் உக்ரைனும் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளன.
இருப்பினும், இந்தச் சம்பவம் பின்வரும் வளர்ந்து வரும் போக்குகளை வெளிப்படுத்துகிறது:
• மறைமுக நடவடிக்கைகள் (Covert operations)
• பினாமி உளவுப் போர் (Proxy intelligence warfare)
• எல்லை தாண்டிய கொலைகள் மற்றும் நாசவேலைகள்
✦. அபுதாபி பேச்சுவார்த்தையும் நேரத்தின் முக்கியத்துவமும்
ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்க மத்தியஸ்தர்கள் பங்கேற்ற அபுதாபி முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் இந்தக் கொலை முயற்சி நடந்ததாக ரஷ்ய அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தச் சம்பவத்தை
“அமைதிப் பேச்சுவார்த்தைகளை முறியடிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாதச் செயல்”
என்று வர்ணித்துள்ளார்.
✦. ஜெலென்ஸ்கியின் ‘சிவப்புக் கோடு’: டொனெட்ஸ்கில் இருந்து பின்வாங்க முடியாது
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கியுள்ளார்:
• டொனெட்ஸ்கில் இருந்து பின்வாங்க முடியாது
• நிலப்பரப்புகளை விட்டுக்கொடுக்க முடியாது
• முன்னணி போர்க்களங்கள் தற்போது இருக்கும் இடத்திலேயே உறையவைக்கப்பட வேண்டும்
மேலும், வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ இடையிலான எந்தவொரு ஒப்பந்தமும், கிவ் (Kyiv) அரசின் அனுமதியின்றி சட்டபூர்வமானதாக இருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
✦. பிளவுபடும் ஐரோப்பா: ஸ்லோவாக்கியாவின் எதிர்ப்பு நிலை
முன்னணி நாடுகள் மோதலின் பாதையில் மேலும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஐரோப்பாவிற்குள் உள்நிலைப் பிளவுகள் தெளிவாகத் தோன்றத் தொடங்கியுள்ளன.
ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico):
• ரஷ்யாவுடனான இருதரப்பு உறவுகளை மீண்டும் தொடங்கியுள்ளார்
• இந்தப் போரை “அர்த்தமற்றது” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்
• ராஜதந்திரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பலவீனமான பங்கை விமர்சித்துள்ளார்
தொடர்ந்து மோதலை அதிகரிப்பது யாருக்கும் பயன் அளிக்காது என்றும், ஸ்லோவாக்கியா ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தைத் தளமாக செயல்பட முடியும் என்றும் அவர் வாதிடுகிறார்.
✦. பெரிய சித்திரம்: போர்க்களத்திற்கு அப்பாற்பட்ட போர்
இந்தக் கொலைச் சதி குற்றச்சாட்டுகள் முழுமையாக உண்மையா இல்லையா என்பதைக் கடந்து, அவை சில முக்கியமான நிதர்சனங்களை வெளிப்படுத்துகின்றன:
• போர் இப்போது மறைமுகமான, நாடுகளைக் கடந்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளது
• உளவுத் துறைகள் எல்லைகளைப் பொருட்படுத்தாமல் ரகசியமாகச் செயல்படுகின்றன
• ராஜதந்திரமும் நாசவேலைகளும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன
✦. முடிவுரை: ஒரு ஆபத்தான பாதை
ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீதான கொலை முயற்சி, உக்ரைன் மோதலை நிர்வகிக்கும் தற்போதைய ஆபத்தான போக்கை தெளிவாக வெளிப்படுத்துகிறது. கொலை முயற்சிகள், பரஸ்பர குற்றச்சாட்டுகள், உளவுத்துறை கசிவுகள் ஆகியவை, நம்பிக்கையையும் ராஜதந்திரத்தையும் மெதுவாக அழித்து வருகின்றன.
இன்றைய சூழலில், அமைதி என்பது வெறும் நிலப்பரப்பைப் பற்றிய கேள்வி மட்டும் அல்ல —
உலகளாவிய சக்திகள், கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் இந்த நிழல் போரிலிருந்து பின்வாங்கத் தயாரா?
என்பதே மையக் கேள்வியாக மாறியுள்ளது.


எழுதியவர்: ஈழத்து நிலவன்
தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர் | சர்வதேச அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்
10/02/2026