சட்டத்தில் இடமிருக்கா ? மனுவை விசாரிக்க கோரியதற்கு சட்ட நடவடிக்கையா ?
வழக்கு விசாரணையின் திசைவழி போக்கை மாற்ற விரும்பவில்லையா?

சட்டத்தில் இடமிருக்கா ? மனுவை விசாரிக்க கோரியதற்கு சட்ட நடவடிக்கையா ?
வழக்கு விசாரணையின் திசைவழி போக்கை மாற்ற விரும்பவில்லையா?

திருப்பரங்குன்றம் சிக்கலில் கவனிக்கப்படாத தமிழ் சித்தாந்த சைவ வழிபாட்டு முறைகளை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும், அதன்படி முடிவுகள் எடுக்கவேண்டும் என்றும் நேற்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மேல்முறையீடு மனுவினை தாக்கல் செய்திருந்தோம் ( SR No : 108685 /2025). முறைப்படி இன்று அந்த மனுவானது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் சிக்கல் தீபத்தூண் வழக்குடன் நாம் தாக்கல் செய்திருந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்.

இன்று காலையில் நமது வழக்கறிஞர் திரு அருணாசலம் அவர்கள் மதுரை உயர்நீதி மன்ற கிளையின் நீதிபதியும், ஜி.ஆர். ஸ்வாமிநாதன் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்தது தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை விசாரிக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நமது மனுவினையும் விசாரணையில் இணைத்துக்கொள்ளம் படி பேசினார்.
அதற்க்கு நீதிபதி செயச்சந்திரன் அவர்கள், கூடுதலாக எந்த மனுவினையும் இந்த விவகாரத்தில் எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூற, அதற்கு வழக்கறிஞர் அருணாசலம் அவர்கள், விசாரணையில் இருக்கும் அதிமுக்கியமான வழக்கில், கடைசி நேரத்தில் கூட தங்களது கருத்தை கூறலாம் என்று ஏற்கனவே நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள், மேலும் இந்த வழக்கில் தமிழ் சித்தாந்த சைவ வழிபாட்டு முறைப்படி எந்த கருத்தும் விவாதிக்கப்படவில்லை இதனால் எங்களது மனுவினையும் இணைத்து விசாரியுங்கள் என்று சொன்னவுடன் கோபமான நீதிபதி ” நீதிமன்ற காவலர்களை வைத்து இவரை வெளியேற்றுங்கள்” என்று மிகவும் கடுமையாக நடந்துள்ளார் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதிபதி.
நீதி துறையில் நீதியரசர்கள் என்ற நீதிபதியை “மை லார்ட்” என்று சொல்வது அந்த பணிக்கான மரியாதையே தவிர, நீதியரசர்கள் தன்னையே கடவுளாக நினைத்துக் கொண்டு, தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க கூடாது என்பது, நீதித்துறையில் நீதிபதிகள் மேற்கொள்ளும் பயங்கரவாதம் ஆகும். ஏற்கனவே முடிந்த வழக்கில் கூட ஒருவர் கருத்தை பதிவு செய்ய மேல்முறையீடு செய்யலாம் என்று சட்டம் சொல்லும் போது, நடந்துகொண்டு இருக்கும் வழக்கில், தீர்வின் முக்கிய அம்சங்களை கொண்ட ஒரு கருத்தை நீதிபதிகள் பார்வைக்கே கொண்டுவர கூடாது என்பது என்ன வகையான அணுகுமுறை ?
ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தீர்ப்பை விசாரிப்பவர்களுக்கே, புதிய கருத்துக்களை எதிர்கொள்ள பயம்வரும். நீதியரசர் ஜெயச்சந்திரன் எதைக்கண்டு பயப்படுகிறார் ? எதனால் இவ்வளவு வெளிப்படையான கோபத்தோடு நடந்துகொள்ளகிறார் ?
பிறகும் விடாத நமது வழக்கறிஞர் திரு அருணாச்சலம் அவர்கள், நீதிபதியை பார்த்து, நான் என்ன செய்தேன் ? நீதிமன்ற போலீசை வைத்து வெளியேற்றும் அளவிற்கு நடந்த குற்றம் என்ன ? “தமிழ் கடவுள் முருகனின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தமிழர் வழிபாட்டு முறையின் கீழ் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறும் மனுவை விசாரிக்க சொல்வது தவறா என்று கேட்டவுடன், உங்களுடைய, பார் கவுன்சில் எண் என்ன ? என்று கேட்டு மிரட்டி, துறை ரீதியாக உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டி, நீதிமன்றத்தில் நீதிமன்ற காவலர்களை வைத்து வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்.
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதே நீதியரசர்கள் இப்படிநடந்து கொள்வது மிகவும் துரதிஸ்டவசமானது. இந்த வழக்கை இதுவரை இவர்கள் எப்படி கையாண்டு கொண்டிருக்கிறார்கள், இனி எவ்வாறு கையாள போகிறார்கள் ? என்ற கேள்விகளுக்கு, நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் அணுகுமுறை சான்றாக அமைகிறது.
வீரத்தமிழர் முன்னணி முன்வைத்த, இந்த வழக்கத்தின் திசைவழி பயணத்தை மாற்றக்கூடிய முக்கியமான கருத்துக்களை கொண்ட ( 15 புள்ளிகள் கோடிடப்பட்டு இருந்தது) நமது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீதியரசர் அச்சம் கொள்ள தேவை என்ன ?, நீங்கள் அந்த வழக்கை விசாரித்து தள்ளுபடி கூட செய்யலாம். ஆனால் விசாரணைக்கே எடுத்துக் கொள்ள மாட்டேன் என்பதும், அதை முன்மொழிய வரும் வழக்கறிஞரை மிரட்டுவதும் என்ன மாதிரியான அணுகுமுறை ?
ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது, இந்த வழக்கு தொடர்பான கூடுதல் மேல்முறையீடுகளை எப்படி நீதியரசர் மறுக்கமுடியும் ?
ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று முன்மொழிய வந்த வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்களை மிரட்டி, நீதிமன்ற காவலர்களை வைத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதும், நடவடிக்கை எடுப்பேன் என்பதும் மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியது. இதுபோன்ற நீதியரசர்கள் முன்வந்து இந்த வழக்கில் இருந்து வெளியேறிக்கொள்வது நீதித்துறைக்கு செய்யும் நற்காரியம். கூடுதலாக ஒரு கருத்தினை உள்வாங்க மறுக்கும் நிலையில் இந்த விசாரணையும், அதன் தீர்ப்பும் எப்படி நேர் வழியில் செல்லும் ?
நாம் தொடுத்திருக்கும் வழக்கும் “லீவ் க்ராண்ட்” அணுகுமுறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு எடுக்காமல் விடமுடியாது என்பதன் அடிப்படையில் நமது வழக்கிற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்ற ஆவலோடு காத்திருக்கிறேன்.
அதே வேளையில், நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் இந்த அணுகுமுறைக்கு வீரத்தமிழர் முன்னணியின் கண்டங்களை பதிவுசெய்கிறேன். நீதியை நீதியாக எதிர்கொண்ட வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்களுக்கு உடன் நிற்கவேண்டியது நமது கடமை.
நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கலாம், நீதியரசர்களை விமர்சிக்க கூடாது என்பது சாலை மோசமாக போடப்பட்டிருந்தால், பொறியாளரை விமர்சிக்க கூடாது. அந்த சாலையையும், அங்கே நடப்பட்டுள்ள அளவை கல்லையும் விமர்சிக்கலாம் என்பது போல இருக்கிறது. எப்பேர்ப்பட்ட நாட்டில் வாழ்கிறோம் என நினைக்கும் போது பயமாகவும் இருக்கிறது.
தமிழம் செந்தில்நாதன்
வீரத்தமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்
கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜ பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 45 ஆண்டுகளாகத் தோற்கடிக்கவே முடியாது என்ற இறுமாப்புடன் இருந்த கேரள இடது சாரி முன்னணியை பாஜ தனித்து களம் கண்டு திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு உள்ளாட்சிகளில் பாஜ கால் பதித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்குக் காரணம் பிரதமர் மோடி மீது உள்ள மக்களின் நம்பிக்கையும், கேரள பாஜ தொண்டர்களின் தொய்வில்லாத உழைப்பும்தான்.

பூத் கமிட்டி உறுப்பினர்களின் இடைவிடாத உழைப்பின் காரணமாகக் கிடைத்த பாஜகவின் இந்த அபார வெற்றி தமிழக பாஜகவிற்குப் புது உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. தமிழகத்திலும் பாஜ எல்லா சட்டசபை தொகுதியிலும் பூத் வாரியாக கமிட்டிகளை நியமித்துவிட்டது. அவர்களுக்கான பயிற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். அப்போது பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலைச் சரி பார்க்க வேண்டும்.
தகுதியில்லாத புது வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தால் அதனை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும். தமிழகத்திலும் ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலை மக்களிடம் காணப்படுகிறது. அதனை நாம் முறையாகப் பயன்படுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தருவோம். பிரதமர் மோடிக்கு அவ்வெற்றியைச் சமர்ப்பிப்போம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளைக்கு (டிசம்பர் 16) ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிகுமார் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்’ என்றார். நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் 2வது நாளாக ஐகோர்ட் மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு முன் நடந்து வருகிறது.
அப்போது கோவில் தரப்பில், ”இது கார்த்திகை தீபத்தூண் அல்ல. சமணர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தூண். இரவில் அதில் விளக்கேற்றி வெளிச்சத்தில் விவாதிப்பார்கள். இது போன்ற தூண் அமைப்பு மதுரை மாவட்டத்தில் சில மலைகளில் உள்ளன” என முன்வைக்கப்பட்டது.
”தனி நீதிபதி தங்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை. தர்கா நிர்வாகம் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளதாக தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டது ஏற்புடையதல்ல” என என தர்கா தரப்பில் வாதிட்டப்பட்டது.
இன்று தர்ஹா தரப்பு, தர்ஹா ஆதரவு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர். நாளைக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய வரலாறு படைத்தது. ஒரு சவரன், 1,00,120 ரூபாய் ஆக விற்பனை ஆகிறது. இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,160 உயர்ந்தது.

சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்ததால், நம் நாட்டிலும் அதன் விலை புதிய உச்சங்களை எட்டி வந்தது. தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம், சவரன் விலை, கடந்த அக்டோபரிலேயே, 95,000 ரூபாயை எட்டியது.
அம்மாதம், 21ம் தேதி தங்கம் சவரன், 97,600 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. பின், தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்தாலும், உச்சத்தை எட்டவில்லை. கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த வெள்ளி கிழமை (டிசம்பர் 12) காலை தங்கம் கிராமுக்கு, 200 ரூபாய் உயர்ந்து, 12,250 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. சவரனுக்கு, 1,600 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 98,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.மாலை மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 12,370 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 960 ரூபாய் அதிகரித்து, 98,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி சனிக்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று (டிச 14) ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (டிச.,15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,460க்கு விற்பனை ஆனது.
ஆனால், மதியம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,120 ஐ தாண்டியது. ஒரு கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515 க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் மீண்டும் ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்தது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெள்ளி விலை கிராமுக்கு இன்று ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: சர்வதேச முதலீட்டாளர்களின் பெரும்பாலான முதலீடுகள், தங்கமாகவே உள்ளது. இது போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்து, நம் நாட்டிலும், அதன் விலை அதிகரித்து வருகிறது.
வெள்ளியிலும் அதிக முதலீடுகள் குவிந்து வருவதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்(கிராமப்புறம்) (VB G RAM G)’ மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் வேலைநாட்கள் 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பாஜ அரசு!
தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!
100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!
இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழகம் தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழக மக்களுக்குக் கிடைக்குமாம்!
பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு!
வேளாண் சட்டம், ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே புதிய திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்! இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சா பொதிகளுடன், மரைன் பொலிசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு,கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள், மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை (13-12-2025) இரவு தொண்டி அடுத்த முள்ளிமுனை கடற்கரையிலிருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (13) இரவு முள்ளிமுனை முக துவார கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மரைன் பொலிசாரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து மரைன் பொலிசார் தீவிரமாக தேடினர்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டையில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை தேவிபட்டினம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து எடை போட்டுப் பார்த்தபோது அதில் 150 கிலோ கஞ்சா இருந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த மரைன் பொலிசார் கடத்தலில் ஈடுபட்ட முள்ளிமுனை பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூ.25 லட்சம் எனவும் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என மரைன் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
TNPSC கோரிக்கை மாநாட்டில் சீமான் முழக்கம் – விருத்தாசலம்
அப்துல் ரவூப் 30வது ஆண்டு நினைவு நாள் – 15-12-2025
நீ தீக்குளித்த செய்தி அறிந்து திகைத்தேன்.

வேதனையோடு வெட்கத்துள் முகம் புதைத்து அழுதேன்.
உனக்காக மட்டுமல்ல, என்னையும் எண்ணித்தான்.
பேர் அறியா உறவே என்னை உனக்குத் தெரியாது, ஆனால் இன்று எனக்கு மட்டுமல்ல உலகத்திற்கே உன்னைத் தெரிந்துவிட்டது.
என் மனக் கண்ணில் நீ நடாத்திய யாகம் தெரிகிறது.
நீ எழுதிய இறுதி வரிகளும் தெரிகிறது.
நீ எரிகிறாய், நெய்யாய் உருகிறாய், புழுவாய் நெளிந்து விழுகிறாய், ஐயனே நீ படும் வேதனையை என்னால் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை.
ஏன் இந்த வேதனை? யாருக்காக இந்தத் தியாகம்? எனக்காகத்தானே, என் உறவுக்காகத்தானே, என் அம்மாவிற்காக, என் அப்பாவிற்காக, அக்காவிற்காக, தம்பி தங்கைக்காக, என் குடும்பத்திற்காக, எங்கிருந்தோ நீ உன்னை வருத்தி உயிரை விட்டாய்.
ஆனால் நான் மட்டும் இங்கே, என் உறவிற்காக உயிர் நீத்த உத்தமனே ,ஏன் இப்படிச் செய்தாயோ? எனக்குப் புரிகிறது.
உனக்கும் ஒரு சொந்த நாடு இருந்திருக்குமானால் நீ இப்படி யோசித்து மாண்டிருக்க மாட்டாய்.
படைதிரட்டி வந்து தமிழன் யார் என்பதைக் காட்டியிருப்பாய்.
என்ன செய்வது? உலகம் எங்கும் பறந்து வாழும் தமிழனுக்கு ஒரு நாடு இல்லை.
சுதந்திரமாய் குந்தி இருக்க ஒரு கூடு இல்லை, தமிழனாகப் பிறந்ததற்காக நிம்மதியான ஒரு வாழ்வு இல்லை.
இந்த அவல நிலைமையை மாற்றப்போவது தமிழீழம்தான் என்பதை நீ சரியாகப் புரிந்து கொண்டாய்.
தமிழன் என்றாலும் உலகில் எந்த மூலையில் வந்தாலும் உணர்வால் ஒன்று பட்டவன் என்று தத்துவத்திற்கு புத்துயிர் ஊட்டிவிட்டாய்.
என் இனத்தின் இரத்தமே, உன் தேசத்தில் நீ மூட்டிய நெருப்பு உன்னை மட்டும் எரிக்கவில்லை.
தமிழ் உருவத்தில் எதிரிக்கு கொள்ளி கொடுக்கும், கோடரிக் காம்புகளின் போலி முகத் தோலையும் எரித்துவிட்டது.
எம் தேசத்தில் இளைஞர், யுவதிகளின் நெஞ்சத்திலே புதிய வேகத்தை ஊட்டிவிட்டது.
இனியும் எம் இன்லம் தலைமுறை உறங்காது.
விழித்து எழும்.
எம்பகை வேருடன் விழும்.
உன் நினைவு நெஞ்சத்தில் நீங்காது வாழும்.
இப்படிக்கு
தமிழீழத்தின் உடன்பிறப்பு.!
கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, சிபிஐ எஸ்பி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தவெக பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம், சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீசார் வழங்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் த.வெ.க., தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, விஜய்க்கு டில்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.