சென்னை – ஜோலார்பேட்டை தடத்தில், மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுதும் விரைவு ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள், சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை தடத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே விதிப்படி, ‘குரூப் ஏ’ வழித்தடத்தில், அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில், சென்ட்ரல் – அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்துக்கு முன்னுரிமை அளித்து, பணிகள் நடந்து வருகின்றன.
அதிக வளைவுகளை நீக்குவது, ரயில் பாதையை மேம்படுத்துவது, மிகவும் பழமையான ரயில்வே பாலங்களை நீக்குவது, ‘சிக்னல்’ தொழில்நுட்பம் மேம்படுத்துதல், தேவையான இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்.
- கூட்டுறவு சங்க பயிர் கடனுக்கு விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை?
- இன்று (மே 07) முக்கிய நிகழ்வுச் செய்திகள்
- சென்னையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, ஒரு சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ. 84,000 ஆக உள்ளது!
- நாய்களில் உள்ள உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி மூலம் பரவும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, 2004ம் ஆண்டுக்கு பின், இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.
- தமிழகத்தில் தங்கம் விலை சிறிய அளவில் உயர்வு; உலக சந்தை மாற்றங்கள் தாக்கம்
தற்போது, 50 சதவீத பணிகளை முடித்துள்ளோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் எஞ்சியுள்ள பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். – இவ்வாறு அவர்கள் கூறினர்.