சென்னை – ஜோலார்பேட்டை தடத்தில், மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுதும் விரைவு ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள், சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை தடத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே விதிப்படி, ‘குரூப் ஏ’ வழித்தடத்தில், அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில், சென்ட்ரல் – அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்துக்கு முன்னுரிமை அளித்து, பணிகள் நடந்து வருகின்றன.
அதிக வளைவுகளை நீக்குவது, ரயில் பாதையை மேம்படுத்துவது, மிகவும் பழமையான ரயில்வே பாலங்களை நீக்குவது, ‘சிக்னல்’ தொழில்நுட்பம் மேம்படுத்துதல், தேவையான இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்.
- மதுரை எல்ஐசி அதிகாரி மரணம் கொலை என உறுதி; சக ஊழியர் கைது
- முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி புதுச்சேரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
- ஈகைப்பெருநாளாம் இரம்ஜான் திருநாளை உலகெங்கும் கொண்டாடும் எனதருமை இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்
- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் 18ம் தேதி ஈரோட்டில் பிரசாரம் செய்ய உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
- சென்னை – புதுச்சேரி – கடலூர் வரை 179 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை
- ரூ.100 கோடி நிலக்கரி மாயமான விவகாரம் விசாரணையை மூடி மறைக்கும் தமிழக மின் வாரியம்
தற்போது, 50 சதவீத பணிகளை முடித்துள்ளோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் எஞ்சியுள்ள பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். – இவ்வாறு அவர்கள் கூறினர்.