அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று அதிகபட்சமாக, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அம்பத்துார், சென்னை அயப்பாக்கம், கொரட்டூர் ஆகிய பகுதிகளில், தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது.

தற்போது, தென் மாநில பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, வடக்கு, தெற்கு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும், 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- இந்தியாவின் முதல் டீப்-டெக் ஸ்டார்ட்அப் கொள்கையை தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது
- தமிழகத்தின் பல மாவட்டங்களில் பாதுகாப்பு, குடிமை மேலாண்மை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் தீவிரம்
- தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 82,000’ஐ நெருங்குகிறது.!
- மார்ச் 8ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை
- 🎬 தடை கோரிக்கைகள் மத்தியில் ‘பராசக்தி’ வெற்றி வேகம் குறையவில்லை
- கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ திட்டம் தாமதம்: திமுக அரசின் அலட்சியம் காரணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரை, கடந்த ஜூன் 1 முதல், நேற்று வரையிலான நிலவரப்படி, 30 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பை விட, 5 சதவீதம் அதிகம்.
வங்க கடலில், மியான்மர் – வங்க தேசம் அருகே, வரும் 25ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.