அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கன்னியா குமரி மாவட்டம் திற்பரப்பு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் தலா, 18 செ.மீ., மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடலில் ஒடிஷா அருகில் நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் அக்., 2 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- தமிழக அரசின் செயல்பாடுகளில் AI தொழில்நுட்பத்தை இணைத்து வருகிறோம் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
- பிப்ரவரி 5 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது; இடைக்கால பட்ஜெட் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளது.
- 22ம் தேதி முதல் “மருந்துகளுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி”
- முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் முன்னிலையில் ரூ.36,660 கோடி மதிப்பிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- சமூக ஊடகங்களைப் பார்த்து பெட்ரோல் குண்டுகள் தயாரித்து தாக்குதல் நடத்திய மதுரை பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- நடந்தது நடந்து போச்சு ! லீக் ஆன வீடியோ மற்றும் ஆடியோ ! விஜய் திருந்த வாய்ப்பில்லை !