சென்னையில் இன்று (செப் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், ஆபரண தங்கம் கிராம், 10,510 ரூபாய்க்கும், சவரன், 84,080 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று (செப் 26) தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 10,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 84,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செப் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,640க்கு விற்பனை ஆகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்துள்ளது.
- மெக்சிகோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- நாங்கள் இதை விடமாடோம் ! பாரியளவில் தொடர இருக்கும் போராட்டம் !
- யாழ். மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது!
- “திமுக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக” வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
- முருகனை பாடுமாறு பணித்ததே தேசியத் தலைவர் தான் – கோவை கமலா
- அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.