சென்னையில் இன்று (செப் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், ஆபரண தங்கம் கிராம், 10,510 ரூபாய்க்கும், சவரன், 84,080 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று (செப் 26) தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 10,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 84,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செப் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,640க்கு விற்பனை ஆகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்துள்ளது.
- மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலுமில்லம் சிரமதானப்பணி ஆரம்பம்
- இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஒவ்வொரு முஸ்லிமும் தலை குனிகிறார்கள் – நிசாம் காரியப்பர்
- Netflix Warner Bros. Discovery-யை கைப்பற்றியது: ஹாலிவுட் உலகில் பெரும் அதிர்ச்சி
- மாஸ்கோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ரஷ்ய GRU உயரதிகாரி உயிர் தப்பினார்
- இலங்கையில் கடந்த 7 நாட்களில் போதைப்பொருளுடன் 3,264 பேர் கைது!
- South Korea posted a record $700 billion in exports for 2025