தென்கிழக்கு வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக இன்று (அக்டோபர் 28) மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

தற்போது மோந்தா புயல் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெருங்கி வருகிறது. இதனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று அக்டோபர் 28ம் தேதி விசாகப்பட்டினம் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
- 𝙊𝙋𝙀𝙍𝘼𝙏𝙄𝙊𝙉 𝙀𝙌𝙐𝘼𝙇𝙄𝙎 ஐக்கிய இராச்சியத்தின் புதிய குடிவரவு அமலாக்கத் திட்டமும் நிரந்தர கண்காணிப்பு யுகத்தின் ஆரம்பமும்
- China–India Tensions Resurface Amid Strategic Maneuvers and Diplomatic Recalibration
- அமெரிக்கா-ஈரான் போர்: கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!
- பொண்டி தாக்குதல்காரர் சாஜித் அக்ரம்: இந்திய காலவரிசையில் புதிய மர்ம இடைவெளிகள் வெளிச்சம்
- பிரெக்சிட் சுமை: ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதன் விளைவாக பிரிட்டனில் வாழ்க்கைச் செலவு எப்படி உயர்ந்தது.
- ஸ்பெயினில் மீண்டும் ரயில் விபத்து: நாடு துயரத்தில் இருக்கும் நேரத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பலர் காயம்
அனைத்து இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தரையிறக்கப்பட்டன.
இன்று (அக்டோபர் 28) விஜயவாடா விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன் விபரம் பின்வருமாறு:
* IX 2819 விசாகப்பட்டினம்- விஜயவாடா
* IX-2862 விஜயவாடா- ஹைதராபாத்
* TX-2875 பெங்களூரு- விஜயவாடா
* TX-2876 விஜயவாடா- பெங்களூரு
* IX-976 ஷார்ஜா-விஜயவாடா
* IX-975 விஜயவாடா-ஷார்ஜா
* IX2743 ஹைதராபாத்-விஜயவாடா
* T X-2743 விஜயவாடா-விஜாகாடா