தென்கிழக்கு வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக இன்று (அக்டோபர் 28) மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

தற்போது மோந்தா புயல் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெருங்கி வருகிறது. இதனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று அக்டோபர் 28ம் தேதி விசாகப்பட்டினம் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
- அமெரிக்க நீதிமன்றத்தில் வரலாற்றுச் தீர்ப்பு: சமூக ஊடக வடிவமைப்பு குழந்தைகளின் மனநலத்தை பாதித்ததாக மெட்டா பொறுப்புக்கூறப்பட்டது
- உலக பெண்கள் தினம் மார்ச் 8
- “நக்சல் பிரச்சனைகளில் இருந்து இந்தியா விரைவில் விடுதலை பெறும்.” – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
- எத்தியோப்பியாவில் நிலச்சரிவு–வெள்ளப் பேரழிவு: பலி எண்ணிக்கை 64‑ஐ கடந்தது
- இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிப்பதற்கான ஒரு விரைவான வழிமுறை.
- கேரளா, சபரிமலை பெண்கள் நுழைவு விவகாரம்: வழக்கை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு
அனைத்து இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தரையிறக்கப்பட்டன.
இன்று (அக்டோபர் 28) விஜயவாடா விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன் விபரம் பின்வருமாறு:
* IX 2819 விசாகப்பட்டினம்- விஜயவாடா
* IX-2862 விஜயவாடா- ஹைதராபாத்
* TX-2875 பெங்களூரு- விஜயவாடா
* TX-2876 விஜயவாடா- பெங்களூரு
* IX-976 ஷார்ஜா-விஜயவாடா
* IX-975 விஜயவாடா-ஷார்ஜா
* IX2743 ஹைதராபாத்-விஜயவாடா
* T X-2743 விஜயவாடா-விஜாகாடா