தென்கிழக்கு வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக இன்று (அக்டோபர் 28) மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

தற்போது மோந்தா புயல் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெருங்கி வருகிறது. இதனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று அக்டோபர் 28ம் தேதி விசாகப்பட்டினம் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
- பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் கூட இருக்காது: இந்திய ராணுவத் தளபதி எச்சரிக்கை
- பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள சர் கிரீக் பகுதியில் இந்திய முப்படைகள் பெரிய அளவில் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
- 12 வயது சிறுமியுடன் அசிங்கமான உரையாடல் – NHS கதிர்வீச்சு நிபுணர் நிரந்தரமாக நீக்கம்
- “தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதற்றம்: ஆளுநர் வெளியேறியதை ஸ்டாலின் கண்டனம், உரை ‘வாசிக்கப்பட்டதாகவே’ அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்”
- செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
- என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
அனைத்து இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தரையிறக்கப்பட்டன.
இன்று (அக்டோபர் 28) விஜயவாடா விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன் விபரம் பின்வருமாறு:
* IX 2819 விசாகப்பட்டினம்- விஜயவாடா
* IX-2862 விஜயவாடா- ஹைதராபாத்
* TX-2875 பெங்களூரு- விஜயவாடா
* TX-2876 விஜயவாடா- பெங்களூரு
* IX-976 ஷார்ஜா-விஜயவாடா
* IX-975 விஜயவாடா-ஷார்ஜா
* IX2743 ஹைதராபாத்-விஜயவாடா
* T X-2743 விஜயவாடா-விஜாகாடா