யாழ்ப்பாணம் – உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது வியாழக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
இது கறித்து மேலும் தெரியவருகையில்:
முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார். படுகாயம்டைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
- கரும்புலி மேஜர் உதயகீதன் | 15.10.2001
- அகவை வாழ்த்து – ஜனவரி 23
- அகவை வாழ்த்து – நவம்பர் 24
- வவுனியாவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.
- “கானல் நீதி” – கலந்துரையாடல்
- இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து புதிய நடைமுறைகள் தொடங்குகின்றன.