மன்னார் பிரதேசச் செயலாளர் பிரில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (06.10.2025) மாலை காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க குழு ஒன்று வருகை தந்த நிலையில் மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த குழு அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.

பேசாலை கிராமத்திற்கு உட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்களுடன் குழு ஒன்று வருகை தந்ததை அறிந்து கொண்ட பிரதேச மக்கள் குறித்த பகுதிக்குச் சென்று வருகை தந்த குழுவினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
இதன் போது பேசாலை பொலிஸாரும் அவ்விடத்திற்கு சென்ற நிலையில் அங்கு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்கள் ஏற்றி வந்த டிராக்டர் இயந்திரத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஒக்ஸ்போர்ட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் என்னதான் நடக்கிறது??
- பங்களாதேஷ் தேர்தல்: ஆரம்ப எண்ணிக்கையில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. வலுவான முன்னிலை
- பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமுல் படுத்திக்கொண்டு பொருளாதார முன்னேற்றத்தை ஒருபோதும் அடைய முடியாது – செல்வம் அடைக்கலநாதன்
- சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி “லெப்.கேணல் ராகவன்” 02.11.1999
- சட்டமன்றத் தேர்தலில் த-வெ-க கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களிடையே ரகசியக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
- ஒபாமா தம்பதியரை குரங்குகளாக காட்டிய இனவெறி வீடியோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்க மறுக்கும் டிரம்ப்
மக்களின் தொடர் எதிர்ப்பை தொடர்ந்து வந்த குழுவினர் அவ்விடத்தில் இருந்து பின்வாங்கிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.