கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று (03-12-2025) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03-12-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள்:
விழுப்புரம்
செங்கல்பட்டு
கள்ளக்குறிச்சி
கடலூர்
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள்:
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
- மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தின் தாக்கம்: கொழும்பு பங்குச் சந்தையில் வலுவான ஏற்றம்.
- உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா ‘கே’ எனும் புதிய வகை விசாவை அறிமுகப்படுத்துகிறது.
- யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் அகற்றப்படாது. – இலங்கை அரசு அறிவிப்பு!
- தமிழகத்தின் ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: ஜனவரியில் தொடரும் அசாதாரண மழை
- டிரம்ப் எச்சரிக்கைக்கு பதிலளித்த ஈரான்: “அதிகக் கொடூரமான தாக்குதல்கள் வரும்” என எச்சரிக்கை
- மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கிறது; காசா நிறுத்துப்போர் நழுவும் நிலையில்
புதுச்சேரியிலும் இன்று (03-12-2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒத்திவைப்பு
இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.