ஒற்றையர் பிரிவு காலிறுதியில் வைஷ்ணவி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்!

by

கர்நாடகாவின் கலபுராகி நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது.

ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, ரஷ்யாவின் நெபிலி மோதினர். ஒரு மணி நேரம் 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் வைஷ்ணவி, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் நெதர்லாந்தின் கிம்ப்ரெரேவை சந்திக்க உள்ளார்.

காலிறுதியில் வைஷ்ணவி, அன்கிதா
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யாவின் பர்டினாவை 6-0, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். இன்று நடக்கும் அரையிறுதியில் அன்கிதா, தாய்லாந்தின் நக்லோவை எதிர்கொள்கிறார்.

பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா, வைஷ்ணவி ஜோடி, 7-6, 6-2 என, இந்தியாவின் சோனல், பெலா ஜோடியை வென்றது. மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சோஹா, ஆகான்ஷா ஜோடி, 6-7, 6-0, 10-5 என ஜப்பானின் ஒஜெகி, இந்தியாவின் ஷிவானி ஜோடியை சாய்த்தது.

banner

இன்று நடக்கும் பைனலில் இந்தியாவின் அன்கிதா, வைஷ்ணவி-சோஹா, ஆகான்ஷா ஜோடி மோதுகின்றன.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00