70
தென் மாகாணத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, கணினி குற்றங்களில் ஈடுபட்ட 198 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்போது, இந்தியர்கள் 174 பேரும் நேபாளிகள் 24 பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்தமை, சுற்றுலா விசாவில் வருகை தந்து சட்டவிரோதமாக தொழில் புரிந்தமை, வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை உடமையில் வைத்திருந்தமை, கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் வரும் பாரிய மோசடிகளில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை செய்திகள்
You Might Be Interested In
- போர்க்குற்றங்கள் குறித்து சாட்சியமளிக்கத் தயார்: சோமரத்ன ராஜபக்ஷவின் பிரமாணப் பத்திரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
- ஆந்திராவில் சித்தூர் மேயர் மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சித்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- உள் மற்றும் கலப்பு வழிமுறைகளை முற்றிலுமாக நிராகரிக்கவும் – 69 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பு நாடுகளை வலியுறுத்துகின்றன.
- இலங்கைக்கான இன்றைய நாணய மாற்று விகிதம்.
- ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
- மே தின ஊர்வலம் 2026 – பிரான்சு
இச்சம்பவம் குறித்து மிதிகம மற்றும் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In