வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான புதிய விடியல் குழுவினைச் சேர்ந்த உறவுகள் வாரந்தோறும், அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்த்தமிழ் மொழியை கற்பிக்கும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
பொருளாதார தேடலுக்காக புலம் பெயர்ந்து வாழும் நாட்டில், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்கள் எல்லா பள்ளிகளிலும் தமிழை கற்க முடியாத சூழலில், அவர்களுக்கு தாய்மொழியை கற்பிக்க வேண்டும் எனும் உயர்ந்த இலக்கிற்காக பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும், தமிழ் மொழி காக்கும் இவ்வுயரிய பணியைச் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், ‘புதிய விடியல்’ நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் உங்களின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்!!!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.
- 2025 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்டக் குழுவினருக்கு இனி பிரித்தானிய குடியுரிமை மற்றும் ILR இல்லை
- வீரவணக்க நிகழ்வு 2026 – பிரான்சு
- குவைத் வான் பாதுகாப்பு தவறுதலாக “மூன்று அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது.”
- பலகட்ட சோதனைகளுக்கு பின், ‘புஜியன்’ என்ற நவீன விமானம் தாங்கி போர்க்கப்பலை, சீனா தன் கடற்படையில் முறைப்படி நேற்று இணைத்தது.
- நாடக நடிகர்களைப் போல செயல்படும் ஆட்சியாளர்கள் – ரவிகரன் எம்.பி.
- Mali Suspends French TV Channels Over Alleged Misinformation on Fuel Blockade